என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொடைக்கானலில் வியாபாரிகளை மிரட்டிய காட்டெருமைகள்
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் காட்டெருமைகள் ஊருக்குள் புகுவது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக பஸ் நிலையம் அருகே உள்ள போக்குவரத்து கழக டெப்போ பகுதியில் நிரந்தரமாக வசித்து வருகிறது. இவை அடிக்கடி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை தாக்குகின்றன.
தற்போது காட்டெருமைகள் அதிகரித்து காணப்படுகிறது. ஆனால் அவைகளுக்கு தேவையான மேய்ச்சல் நிலம் வனப்பகுதியில் இல்லாததால் குடியிருப்பு மற்றும் நகர் பகுதியில் புகுந்து விடுகின்றன. நேற்று கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். அதனைத் தொடர்ந்து கீழ்மலை பகுதியான தாண்டிக்குடியில் கூலித் தொழிலாளி பாண்டி என்பவரை காட்டெருமை விரட்டியது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார்.
இரவு நேரத்தில் திடீரென நகர் பகுதியில் புகுந்த காட்டெருமைகள் அண்ணாசாலையில் கூட்டம் கூட்டமாக வலம் வந்தது இதனால் சாலையோர வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் அச்சமடைந்தனர். திடீரென துரத்தியதால் அவர்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓடினர்.
அதன் பின்பு வனத்துறையினர் அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் காட்டெருமைகளுக்கு தேவையான இரை மற்றும் தண்ணீர் வனப்பகுதியில் கிடைக்காததால் ஊருக்குள் புகுந்து விடுகிறது. எனவே வனத்துறையினர் மேய்ச்சல் நிலத்தை அதிகரித்து அவைகளுக்கு தேவையான தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும். மேலும் காட்டெருமைகள் நகர் மற்றும் விவசாய நிலங்களில் புகுவதை நிந்தரமாக தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்