search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லடம் அருகே லாரி மோதி ஊர்க்காவல் படை வீரர் பலி
    X

    பல்லடம் அருகே லாரி மோதி ஊர்க்காவல் படை வீரர் பலி

    பல்லடம் அருகே லாரி மோதி ஊர்க்காவல் படை வீரர் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கொடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் கன்னிமுத்து (24). ஊர்க்காவல் படை வீரர். இவர் பல்லடம் போக்குவரத்து போலீசில் இணைந்து பணியாற்றி வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு இவர் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். பொங்கலூர் பி.ஏ.பி. வாய்க்கால் பகு தியில் சென்ற போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் கன்னிமுத்து பலத்த காயம் அடைந்தார். அவரை பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். விபத்து குறித்து அவினாசி பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×