search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபி அருகே விபத்து: விவசாயி பலி
    X

    கோபி அருகே விபத்து: விவசாயி பலி

    கோபி அருகே விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    கோபி அருகே உள்ள லா.தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது48) விவசாயி. இவர் நேற்று மாலை கோபி அருகே உள்ள நல்ல கவுண்டன்பாளையம் பால் சொசைட்டிக்கு பால் ஊற்ற மொபட்டில் சென்றார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த சகுந்தலா என்பவரும் சென்றார். லா. தொட்டிபாளையம் ரோட் டில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மினிவேனும், மொபட்டும் மோதிக்கொண்டன.

    இதில் மாரிச்சாமி, சகுந்தலா ஆகிய 2 பேரும்தூக்கி வீசப்பட்டனர். 2 பேரும் மீட்கப்பட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    செல்லும் வழியிலேயே மாரிச்சாமி பரிதாபமாக இறந்தார். சகுந்தலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×