என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூலூர் அருகே கார் மோதி கேண்டீன் பெண் ஊழியர் பலி
Byமாலை மலர்29 Jan 2018 9:58 AM GMT (Updated: 29 Jan 2018 9:58 AM GMT)
சூலூர் அருகே கார் மோதி கேண்டீன் பெண் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் எம்.சடையப்ப கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் லிங்கசாமி. விவசாயி. இவரது மனைவி கேப்பம்மாள் (வயது 50). இவர்களது மகள் கோவை சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது கோவை வந்த கேப்பம்மாள் சூலூரில் உள்ள மில் கேண்டீனில் வேலைக்கு சேர்ந்தார்.
சங்கோதிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் கேப்பம்மாள் வேலைக்கு புறப்பட்டார். ஊத்துப்பாளையம் பிரிவு ரோட்டை கடந்தபோது கோவையில் இருந்து வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கேப்பம்மாள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X