என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் இருந்து கடலூருக்கு மது பாட்டில்கள் கடத்தி வந்த இளம்பெண் கைது
Byமாலை மலர்22 Jan 2018 11:56 AM GMT (Updated: 22 Jan 2018 11:56 AM GMT)
புதுவையில் இருந்து கடலூருக்கு மது பாட்டில்கள் கடத்தி வந்த இளம்பெண்னை கைது செய்த போலீசார் அவரது கணவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
புதுவையில் இருந்து தமிழகத்துக்கு மது கடத்துவதை தடுக்கும் வகையில் கடலூர் ஆல்பேட்டையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள போலீசார் 24 மணி நேரமும் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவையில் இருந்து கடலூர் நோக்கி வந்த ஒரு மொபட்டில் பெண் ஒருவர் வந்து கொண்டிருந்தார். சந்தேகத்தின் பேரில் அந்த மொபட்டை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
அதில் புதுவையில் இருந்து கடத்தி வரப்பட்ட 120 லிட்டர் சாராயமும், 100 மது பாட்டில்களும் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் கடலூர் முதுநகர் வசுந்தராயபாளையம் பகுதியைச் சேர்ந்த லெனின்குமார் என்பவரின் மனைவி அனுசுயா (வயது 24) என்பது தெரியவந்தது.
இவர் தனது கணவர் உதவியுடன் கடலூர் முதுநகரில் வைத்து விற்பனை செய்ய புதுவையில் இருந்து மது கடத்தி வந்தது தெரிந்தது.
இது தொடர்பாக அனுசுயாவை போலீசார் கைது செய்தனர். லெனின் குமாரை வலைவீசி தேடி வருகின்றனர். #tamilnews
புதுவையில் இருந்து தமிழகத்துக்கு மது கடத்துவதை தடுக்கும் வகையில் கடலூர் ஆல்பேட்டையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள போலீசார் 24 மணி நேரமும் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவையில் இருந்து கடலூர் நோக்கி வந்த ஒரு மொபட்டில் பெண் ஒருவர் வந்து கொண்டிருந்தார். சந்தேகத்தின் பேரில் அந்த மொபட்டை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
அதில் புதுவையில் இருந்து கடத்தி வரப்பட்ட 120 லிட்டர் சாராயமும், 100 மது பாட்டில்களும் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் கடலூர் முதுநகர் வசுந்தராயபாளையம் பகுதியைச் சேர்ந்த லெனின்குமார் என்பவரின் மனைவி அனுசுயா (வயது 24) என்பது தெரியவந்தது.
இவர் தனது கணவர் உதவியுடன் கடலூர் முதுநகரில் வைத்து விற்பனை செய்ய புதுவையில் இருந்து மது கடத்தி வந்தது தெரிந்தது.
இது தொடர்பாக அனுசுயாவை போலீசார் கைது செய்தனர். லெனின் குமாரை வலைவீசி தேடி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X