search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் இருந்து கடலூருக்கு மது பாட்டில்கள் கடத்தி வந்த இளம்பெண் கைது
    X

    புதுவையில் இருந்து கடலூருக்கு மது பாட்டில்கள் கடத்தி வந்த இளம்பெண் கைது

    புதுவையில் இருந்து கடலூருக்கு மது பாட்டில்கள் கடத்தி வந்த இளம்பெண்னை கைது செய்த போலீசார் அவரது கணவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    கடலூர்:

    புதுவையில் இருந்து தமிழகத்துக்கு மது கடத்துவதை தடுக்கும் வகையில் கடலூர் ஆல்பேட்டையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

    இங்குள்ள போலீசார் 24 மணி நேரமும் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவையில் இருந்து கடலூர் நோக்கி வந்த ஒரு மொபட்டில் பெண் ஒருவர் வந்து கொண்டிருந்தார். சந்தேகத்தின் பேரில் அந்த மொபட்டை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

    அதில் புதுவையில் இருந்து கடத்தி வரப்பட்ட 120 லிட்டர் சாராயமும், 100 மது பாட்டில்களும் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் கடலூர் முதுநகர் வசுந்தராயபாளையம் பகுதியைச் சேர்ந்த லெனின்குமார் என்பவரின் மனைவி அனுசுயா (வயது 24) என்பது தெரியவந்தது.

    இவர் தனது கணவர் உதவியுடன் கடலூர் முதுநகரில் வைத்து விற்பனை செய்ய புதுவையில் இருந்து மது கடத்தி வந்தது தெரிந்தது.

    இது தொடர்பாக அனுசுயாவை போலீசார் கைது செய்தனர். லெனின் குமாரை வலைவீசி தேடி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×