என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதலித்து ஏமாற்றிய சிறைத்துறை அதிகாரி கைது
Byமாலை மலர்22 Jan 2018 9:41 AM GMT (Updated: 22 Jan 2018 9:41 AM GMT)
திருமணம் செய்வதாக காதலித்து ஏமாற்றிய நிலையில் இளம்பெண் கழுத்தை அறுத்து பெண் தற்கொலை முயன்றதால் சிறைத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.
சென்னை:
சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையை சேர்ந்தவர் சுமதி (வயது 25). பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். அவருடன் பயிற்சியில் ஈடுபட்ட சத்தியமூர்த்தி (27) என்பவருடன் காதல் ஏற்பட்டது. என்ஜினீயரிங் முடித்துள்ள சத்தியமூர்த்தி வேலூரில் சிறைத்துறை நன்னடத்தை அதிகாரியாக உள்ளார்.
இவர்களின் காதலை சத்திய மூர்த்தியின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்வதாக சுமதியிடம் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
கடந்த 19-ந்தேதி அவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதற்காக சுமதி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வேலூர் அருகில் உள்ள முருகன் கோவிலில் காத்திருந்தார். ஆனால் சத்தியமூர்த்தி வராததால் சுமதி ஏமாற்றம் அடைந்தார்.
இந்த நிலையில் சத்திய மூர்த்தி மறுநாள் இரவு தனது பெற்றோருடன் சுமதி வீட்டிற்கு சென்றார். தனக்கும் உறவினர் பெண்ணுக்கும் 22-ந்தேதி (இன்று) திருமணம் நடக்க இருப்பதாக கூறி திருமண பத்திரிகையை கொடுத்தார்.
இதனால் மனம் உடைந்த சுமதி காதலன் கண் முன்னே பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவர் மயிலாப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக குமரன் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் விசாரணை நடத்தி சத்தியமூர்த்தியை கைது செய்தார். அவர் மீது 306 (தற்கொலைக்கு தூண்டுவது), 417 (ஏமாற்றுதல்) ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான சத்தியமூர்த்தி புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையை சேர்ந்தவர் சுமதி (வயது 25). பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். அவருடன் பயிற்சியில் ஈடுபட்ட சத்தியமூர்த்தி (27) என்பவருடன் காதல் ஏற்பட்டது. என்ஜினீயரிங் முடித்துள்ள சத்தியமூர்த்தி வேலூரில் சிறைத்துறை நன்னடத்தை அதிகாரியாக உள்ளார்.
இவர்களின் காதலை சத்திய மூர்த்தியின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்வதாக சுமதியிடம் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
கடந்த 19-ந்தேதி அவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதற்காக சுமதி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வேலூர் அருகில் உள்ள முருகன் கோவிலில் காத்திருந்தார். ஆனால் சத்தியமூர்த்தி வராததால் சுமதி ஏமாற்றம் அடைந்தார்.
இந்த நிலையில் சத்திய மூர்த்தி மறுநாள் இரவு தனது பெற்றோருடன் சுமதி வீட்டிற்கு சென்றார். தனக்கும் உறவினர் பெண்ணுக்கும் 22-ந்தேதி (இன்று) திருமணம் நடக்க இருப்பதாக கூறி திருமண பத்திரிகையை கொடுத்தார்.
இதனால் மனம் உடைந்த சுமதி காதலன் கண் முன்னே பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவர் மயிலாப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக குமரன் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் விசாரணை நடத்தி சத்தியமூர்த்தியை கைது செய்தார். அவர் மீது 306 (தற்கொலைக்கு தூண்டுவது), 417 (ஏமாற்றுதல்) ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான சத்தியமூர்த்தி புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X