search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது: அப்பல்லோ மருத்துவமனை
    X

    ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது: அப்பல்லோ மருத்துவமனை

    ஜெயலலிதா மரணத்தை அறிவித்ததில் மருத்துவ நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டன என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. #JayalalithaDeath #ApolloHospitals
    சென்னை:

    அதிகாரபூர்வ அறிவிப்புக்கு ஒருநாள் முன்னதாக, அதாவது 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் மன்னார் குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் திவாகரன் கூறியதாக எழுந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது என்று அப்பலோ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. 2016 டிச.5-ம் தேதி ஜெயலலிதா மரணத்தை அறிவித்ததில் மருத்துவ நடைமுறைகள் பின்பற்றப்பட்டன எனவும், ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது எனவும் டிசம்பர் 5-ம் தேதி தான் ஜெயலலிதா மரணம் அடைந்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக உண்மையைதான் தெரிவித்து உள்ளோம் என்றும் அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதற்கிடையே, ஜெயலலிதா மரணம் பற்றிய தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக திவாகரனும் விளக்கம் அளித்து இருந்தார்.
    Next Story
    ×