search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளையான்குடி அருகே இளம் பெண் கடத்தல்: வாலிபர் மீது புகார்
    X

    இளையான்குடி அருகே இளம் பெண் கடத்தல்: வாலிபர் மீது புகார்

    இளையான்குடி அருகே இளம் பெண் கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியாண்டி. இவரது மகள் சுதா (வயது 19). பிளஸ்-2 முடித்துள்ள இவர் சில மாதங்களாக தையல் பயிற்சிக்கு சென்று வந்தார்.

    சம்பவத்தன்று வெளியே சென்ற சுதா பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். பலன் இல்லை.

    இது குறித்து பெரியாண்டி இளையான்குடி போலீசில் புகார் செய்தார். அதில், எனது மகளை பரமக்குடியைச் சேர்ந்த விணுச் சக்கரவர்த்தி (22) என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

    இதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×