search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மது குடிக்க மனைவி பணம் தராததால் டிரைவர் தற்கொலை
    X

    புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மது குடிக்க மனைவி பணம் தராததால் டிரைவர் தற்கொலை

    புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் மணம் உடைந்த டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
    பெரம்பூர்:

    பெரம்பூர் நெல்வயல் ரோடு கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் கண்ணன். வேன் டிரைவர். இவர் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டார். ஆனால் பணம் தர மறுத்து விட்டார்.

    இதனால் மனம் உடைந்த கண்ணன் உடலில் மண் எண்ணை ஊற்றி தீக்குளித்தார். உடனே அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி கண்ணன் இறந்தார்.

    வியாசர்பாடி கக்கன்ஜி காலனி முனிவேல் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் ஆட்டோ டிரைவர். இவருக்கு 2 மனைவி உள்ளனர். இந்த நிலையில் கார்த்திக்கை அவரது பெற்றோர் முதல் மனைவி மற்றும் குழந்தைகளை சரியாக கவனிக்கவில்லை என்று கூறி கண்டித்தனர். இதனால் மன முடைந்த கார்த்திக், தன் இரண்டாவது மனைவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    Next Story
    ×