என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஓட்டப்பிடாரத்தில் ம.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஓட்டப்பிடாரம்:
அனைத்து பயிர் காப்பீட்டுக்கான இழப்பீட்டு தொகை உடனடியாக வழங்க வேண்டும், ஓட்டப் பிடாரம் பகுதியில் பழுடைந்த அனைத்து கிராம சாலைகளை சீரமைக்க வேண்டும், அனைத்து கிராமங்களிலும் அடிப்படை சுகாதார வசதி செய்து தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரில் ம.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் வீரபாண்டி கோபி, கிழக்கு ஒன்றிய செயலாளர் வீரபாண்டி சரவணன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் யோகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் அழகுசுந்தரம் பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன், மாநில தீர்மான குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி பாண்டியன், தூத்துக்குடி மாநகர செயலாளர் முருகபூபதி, மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் லிங்கசாமி, நகர செயலாளர் ஜெயராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்