search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் பெண் வக்கீல் வீட்டில் 13 பவுன் நகை கொள்ளை
    X

    மதுரையில் பெண் வக்கீல் வீட்டில் 13 பவுன் நகை கொள்ளை

    மதுரை வக்கீல் வீட்டில் 13 பவுன் நகைகளை கொள்ளை அடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    ஊமச்சிகுளம் அருகே உள்ள திருமால்புரம் அருணாச்சலம் நகரை சேர்ந்த விஜயராகவன் மனைவி கிருஷ்ணவேணி (வயது 37). வக்கீலாக உள்ளார்.

    சம்பவத்தன்று இரவு கிருஷ்ணவேணி தூங்கி கொண்டிருந்த போது யாரோ மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 13 பவுன் நகைகளை திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ. 2½ லட்சம் ஆகும்.

    இதுகுறித்து கிருஷ்ணவேணி ஊமச்சிகுளம் போலீசில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×