search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடுங்கையூரில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை
    X

    கொடுங்கையூரில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை

    கொடுங்கையூரில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்த பீரோவில் 50 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பூர்:

    சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில் வசித்து வருபவர் பூபதி (62). ஓய்வு பெற்ற சப்-இன்ஸ் பெக்டர். அண்ணாநகர் போக்குவரத்து பிரிவில் பணியாற்றியபோது ஓய்வு பெற்றார். இவர் 2 நாட்களுக்கு முன்பு சீர்காழியில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார்.

    இன்று காலையில் வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பூபதி அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரிந்தது. இதையடுத்து அவர் கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×