என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரவாயல் அருகே குட்கா பதுக்கிய குடோன் கண்டுபிடிப்பு
Byமாலை மலர்28 Nov 2017 9:23 AM GMT (Updated: 28 Nov 2017 9:23 AM GMT)
மதுரவாயல் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கிய குடோனை போலீசார் கண்டுபிடித்தனர்.
போரூர்:
மதுரவாயல் அய்யாவு நகரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இன்று காலை அப்பகுதியில் உள்ள குடோனில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு ஒரு டன் எடை கொண்ட ஏராளமான குட்கா பொருட்கள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சப்ளை செய்ய பயன்படுத்தி வந்த இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.15லட்சத்திற்கும் மேல் இருக்கும் என தெரிகிறது.
அங்கிருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த விஜய், ஈரோட்டைச் சேர்ந்த ராஜேஷ், சென்னை அய்யப்பந்தாங்கலைச் சேர்ந்த கனகலிங்கம் ஆகியோரை கைது செய்தனர். குட்கா பொருட்கள் சப்ளை செய்து வரும் உரிமையாளரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X