என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நடராஜன் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி
Byமாலை மலர்18 Nov 2017 8:13 AM GMT (Updated: 18 Nov 2017 8:13 AM GMT)
சசிகலாவின் கணவர் எம்.நடராஜனுக்கு நோய் தொற்று ஏற்பட்டதால் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை:
சசிகலாவின் கணவர் எம். நடராஜனுக்கு கடந்த மாதம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அவரது சிறுநீரகம், கல்லீரல் ஆகியவை பாதிக்கப்பட்டதால் உடல் நிலை மோசமானது.
இதனால் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக சிறுநீரகத்தையும், கல்லீரலையும் மாற்ற வேண்டும் என்று கூறினார்கள்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்ட நடராஜனுக்கு கடந்த மாதம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை டாக்டர்கள் செய்தனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்த ஒருவர் மூளைச் சாவு அடைந்ததையொட்டி அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நடராஜனுக்கு பொறுத்தப்பட்டது.
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நடராஜனை சிறையில் இருந்த சசிகலா பரோலில் வந்து பார்த்தார். 5 நாட்கள் சென்னையில் தங்கி அவர் கணவரை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
இதைத் தொடர்ந்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து நடராஜன் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் ஆனார். டாக்டரின் அறிவுரைப்படி அவர் ஓய்வு எடுத்து வந்தார். போரூரில் உள்ள தம்பி வீட்டில் அவர் தங்கி இருந்தார். அவரது உடல்நிலையை உறவினர்கள் அருகில் இருந்து கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நடராஜனுக்கு நேற்றிரவு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர் உடனடியாக பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது.
அதனால் சில பாதிப்புகள் உண்டானதால் அவரை மீண்டும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். டாக்டர்கள் நடராஜன் உடல்நிலையை கவனித்து வருகிறார்கள்.
சசிகலாவின் கணவர் எம். நடராஜனுக்கு கடந்த மாதம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அவரது சிறுநீரகம், கல்லீரல் ஆகியவை பாதிக்கப்பட்டதால் உடல் நிலை மோசமானது.
இதனால் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக சிறுநீரகத்தையும், கல்லீரலையும் மாற்ற வேண்டும் என்று கூறினார்கள்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்ட நடராஜனுக்கு கடந்த மாதம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை டாக்டர்கள் செய்தனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்த ஒருவர் மூளைச் சாவு அடைந்ததையொட்டி அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நடராஜனுக்கு பொறுத்தப்பட்டது.
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நடராஜனை சிறையில் இருந்த சசிகலா பரோலில் வந்து பார்த்தார். 5 நாட்கள் சென்னையில் தங்கி அவர் கணவரை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
இதைத் தொடர்ந்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து நடராஜன் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் ஆனார். டாக்டரின் அறிவுரைப்படி அவர் ஓய்வு எடுத்து வந்தார். போரூரில் உள்ள தம்பி வீட்டில் அவர் தங்கி இருந்தார். அவரது உடல்நிலையை உறவினர்கள் அருகில் இருந்து கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நடராஜனுக்கு நேற்றிரவு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர் உடனடியாக பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது.
அதனால் சில பாதிப்புகள் உண்டானதால் அவரை மீண்டும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். டாக்டர்கள் நடராஜன் உடல்நிலையை கவனித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X