என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொத்தவால்சாவடி குடோனில் 50 மூட்டைகளில் புகையிலை பதுக்கல்: ஒருவர் கைது
ராயபுரம்:
கொத்தவாசல் சாவடி, கோவிந்தப்பநாயக்கன் தெருவில் உள்ள குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் தலைமையில் போலீசார் குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு மினி வேனில் ஏற்றிக் கொண்டிருந்த மூட்டைகளை சோதனை செய்தனர்.
அதில் தடை செய்யப்பட்ட ‘ஜர்தா’ புகையிலை இருப்பது தெரிந்தது. மேலும் குடோனில் 50 மூட்டைகளில் புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன்மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக குடோன் மேலாளர் சரவணனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், புகையிலை மூட்டைகள் அகமதாபாத்தில் இருந்து மொத்தமாக கொண்டு வரப்பட்டு இருப்பது தெரிந்தது. இங்கிருந்து சென்னையில் பல்வேறு இடங்களுக்கு பிரித்து அனுப்பி வந்து உள்ளனர்.
குடோனில் புகையிலை மூட்டைகளை பதுக்கி வைக்க கூறியது யார்? அவருடன் தொடர்புடைய வியாபாரிகள் பற்றிய விவரத்தையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்