என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவாஜி கணேசனையே மக்கள் தோற்கடித்தார்கள்: கமலுக்கு அமைச்சர் ஓ. எஸ். மணியன் எச்சரிக்கை
Byமாலை மலர்20 July 2017 7:16 AM GMT (Updated: 20 July 2017 7:16 AM GMT)
நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே மக்கள் தோற்கடித்தார்கள் என்பதை உணர வேண்டும் என கமலஹாசனுக்கு அமைச்சர் ஓ. எஸ். மணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:
ஊழல் குற்றச்சாட்டு புகார்களை அமைச்சர்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று நடிகர் கமல ஹாசன் தனது ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கமலஹாசனின் இந்த அதிரடி கோரிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தங்கள் மீது ஊழல் புகார்களை கூறியிருப்பதால் கமலஹாசன் மீது அமைச்சர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்கள் கமலஹாசனை விமர்சித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அரசியல்வாதி என்றால் மக்களின் சுக துக்கங்களில் பங்கெடுக்க வேண்டும். எந்த விதத்தில் கமல் தன்னை அரசியல்வாதி எனக் கூறுகிறார் என்பது தெரிய வில்லை. திரைத்துறையில் கமல்ஹாசன் நல்ல நடிகராக திகழ்ந்தவர்.
நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் அரசியில் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளதாக எண்ணத் தோன்றுகிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே மக்கள் புறக்கணித்தார்கள், தோற்கடித்தார்கள் என்பதை கமலஹாசன் உணர வேண்டும்.
அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்க தயாராக உள்ளோம் அவரை அரசியல் களத்தில் சந்திக்க தயாராக உள்ளோம்.
தமிழக அரசில் ஊழல் இருப்பது உண்மையானால் குற்றம்சாட்டும் கமல் அதனை நிரூபிக்கட்டும்.
இவ்வாறு அமைச்சர் ஓ. எஸ். மணியன் கூறினார்.
ஊழல் குற்றச்சாட்டு புகார்களை அமைச்சர்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று நடிகர் கமல ஹாசன் தனது ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கமலஹாசனின் இந்த அதிரடி கோரிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தங்கள் மீது ஊழல் புகார்களை கூறியிருப்பதால் கமலஹாசன் மீது அமைச்சர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்கள் கமலஹாசனை விமர்சித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அரசியல்வாதி என்றால் மக்களின் சுக துக்கங்களில் பங்கெடுக்க வேண்டும். எந்த விதத்தில் கமல் தன்னை அரசியல்வாதி எனக் கூறுகிறார் என்பது தெரிய வில்லை. திரைத்துறையில் கமல்ஹாசன் நல்ல நடிகராக திகழ்ந்தவர்.
நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் அரசியில் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளதாக எண்ணத் தோன்றுகிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே மக்கள் புறக்கணித்தார்கள், தோற்கடித்தார்கள் என்பதை கமலஹாசன் உணர வேண்டும்.
அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்க தயாராக உள்ளோம் அவரை அரசியல் களத்தில் சந்திக்க தயாராக உள்ளோம்.
தமிழக அரசில் ஊழல் இருப்பது உண்மையானால் குற்றம்சாட்டும் கமல் அதனை நிரூபிக்கட்டும்.
இவ்வாறு அமைச்சர் ஓ. எஸ். மணியன் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X