என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முத்துக்கிருஷ்ணன் மரணம்: சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்- தாயார் அலமேலு
Byமாலை மலர்16 March 2017 4:48 AM GMT (Updated: 16 March 2017 4:48 AM GMT)
என் மகன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றும் சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் என முத்துக்கிருஷ்ணனின் தாயார் அலமேலு கூறினார்.
சேலம்:
டெல்லியில் தற்கொலை செய்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் உடல் இன்று காலை சேலம் கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்து கதறி அழுத அவரது தாயார் கண்ணீர் மல்க கூறியதாவது:-
கடந்த 16-ந்தேதி வீட்டிற்கு வருவேன் என்று போனில் என்னிடம் தெரிவித்தான். ஆனால் இப்படி பிணமாக வருவான் என்று நான் நினைக்கவில்லை. சாப்பிடாமல் எந்த நேரமும் படிப்பு, படிப்பு என்று படித்துக்கொண்டே இருந்தான். நன்றாக படித்து நல்ல வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுவான் என்று நம்பி இருந்தோம்.
ஆனால் இன்று பிணமாக வந்து இருக்கிறான். அவன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை. அவன் தைரியசாலி, கோழை கிடையாது, சாகும்போது கூட ஹெட்போனை காதில் மாட்டி இருக்கிறான். இதனால் அவன் தற்கொலை செய்ய வாய்ப்பு இல்லை. இது திட்டமிட்ட கொலை தான். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். சி.பி.ஐ. விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முத்துக்கிருஷ்ணனின் சகோதரிகள் கலைவாணி, சுபா, ஜெயந்தி ஆகியோர் கூறியதாவது:-
எங்களது சகோதரர் தற்கொலை செய்து கொண்டார் என்பது நம்பும்படியாக இல்லை. அவரது சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இவ்வாறு முத்துக்கிருஷ்ணனின் தந்தை கூறினார்.
டெல்லியில் தற்கொலை செய்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் உடல் இன்று காலை சேலம் கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்து கதறி அழுத அவரது தாயார் கண்ணீர் மல்க கூறியதாவது:-
கடந்த 16-ந்தேதி வீட்டிற்கு வருவேன் என்று போனில் என்னிடம் தெரிவித்தான். ஆனால் இப்படி பிணமாக வருவான் என்று நான் நினைக்கவில்லை. சாப்பிடாமல் எந்த நேரமும் படிப்பு, படிப்பு என்று படித்துக்கொண்டே இருந்தான். நன்றாக படித்து நல்ல வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுவான் என்று நம்பி இருந்தோம்.
ஆனால் இன்று பிணமாக வந்து இருக்கிறான். அவன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை. அவன் தைரியசாலி, கோழை கிடையாது, சாகும்போது கூட ஹெட்போனை காதில் மாட்டி இருக்கிறான். இதனால் அவன் தற்கொலை செய்ய வாய்ப்பு இல்லை. இது திட்டமிட்ட கொலை தான். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். சி.பி.ஐ. விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முத்துக்கிருஷ்ணன் உடலை பார்த்து தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி.
முத்துக்கிருஷ்ணனின் சகோதரிகள் கலைவாணி, சுபா, ஜெயந்தி ஆகியோர் கூறியதாவது:-
எங்களது சகோதரர் தற்கொலை செய்து கொண்டார் என்பது நம்பும்படியாக இல்லை. அவரது சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு பன்னீர்செல்வம் எம்.பி. மற்றும் கலெக்டர் சம்பத் ஆகியோர் அஞ்சலி செலுத்திய காட்சி.
எனது மகன் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை அல்ல, அவனது சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் தான் உண்மைகள் வெளிவரும்.இவ்வாறு முத்துக்கிருஷ்ணனின் தந்தை கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X