மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நேற்று 2 ஆயிரத்து 393 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 2 ஆயிரத்து 555 கன அடியாக அதிகரித்தது.
மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல்

1.75 லட்சம் சிவப்பு ரேஷன் கார்டுதாரர்கள் பயனடையும் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
கனிமொழி எம்.பி. நாளை குமரிக்கு வருகை- விழா மேடை அமைக்கும் பணி தீவிரம்

குமரிக்கு நாளை கனிமொழி எம்.பி. வருவதையொட்டி அவர் பங்கேற்க இருக்கும் பொதுக்கூட்டத்துக்கான மேடை அமைக்கும் பணியை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா விதிமுறைகளை மீறும் விடுதிகளுக்கு சீல்- கலெக்டர் எச்சரிக்கை

கொரோனா விதிமுறைகளை மீறும் விடுதிகளுக்கு 'சீல்' வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் பொங்கல் விழா- சுற்றுலா பயணிகள் உற்சாகம்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் பொங்கல் சுற்றுலா விழா கொண்டாடப்பட்டது. போட்டிகளில் கலந்துகொண்டும், நடனம் ஆடியும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
முதுமலையில் வளர்ப்பு யானைகளுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்

முதுமலையில் வளர்ப்பு யானைகளுடன் வனத்துறையினர் பொங்கல் விழாவை கொண்டாடினர்.
பொங்கல் விடுமுறையையொட்டி ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பொங்கல் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். வாகனங்கள் அதிகரிப்பால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொங்கலை முன்னிட்டு ரூ.6½ கோடிக்கு மது விற்பனை

தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கலை முன்னிட்டு ரூ.6½ கோடிக்கு மதுவிற்பனை நடந்து உள்ளது.
மழைநீர் தேங்கியதால் அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம்- விவசாயிகள் வேதனை

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த மானாவாரி பயிர்கள் முளைத்து சேதம் அடைந்து உள்ளன. இதுவிவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
கணவரை காப்பாற்ற முயன்ற இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

கணவனை காப்பாற்ற முயன்று மனைவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க.வின் பொய் பிரசாரம் எடுபடாது- அமைச்சர் கடம்பூர் ராஜூ

வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் கபட நாடகம், பொய் பிரசாரம் எடுபடாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தனர்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தனர்.
வனப்பகுதி கோவிலில் உருவபொம்மைகள் வைத்து பக்தர்கள் வினோத வழிபாடு

டி.என்.பாளையம் அருகே வனப்பகுதியில் உள்ள கோவிலில் உருவபொம்மைகள் வைத்து பக்தர்கள் வினோத வழிபாடு செய்தனர்.
மாங்காடு அருகே நாயை கொடூரமாக கொன்ற 3 பேர் மீது வழக்கு

மாங்காடு அருகே நாய் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை- அமைச்சர் தகவல்

சிறந்த மாடு பிடி வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
தஞ்சை பெரிய கோவிலில் 100 கிலோ காய்- கனிகளால் நந்திக்கு அலங்காரம்

தஞ்சை பெரியகோவிலில் மாட்டு பொங்கல் விழாவையொட்டி தலா 100 கிலோ காய்-கனிகளால் எளிய முறையில் நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: தம்பதி உள்பட 3 பேர் பலி

மோட்டார் சைக்கிள்-மொபட் மோதிய விபத்தில் தம்பதி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.