என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பொருளாதார இலக்குகளை எட்டும் வழிகள்
Byமாலை மலர்5 Jan 2019 2:52 AM GMT (Updated: 5 Jan 2019 2:52 AM GMT)
பல்வேறுபட்ட விதங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்வது உங்களது வருமானத்தை அதிவேகமாக அதிகரிக்கும் ஒரு நிச்சயமான வழி ஆகும். என்ன புத்திசாலித்தனமான முதலீடு, அதன் அம்சங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்...
நம் அனைவருக்கும் பொருளாதாரம் சார்ந்த கனவுகள், இலக்குகள் உண்டு. அது, வீடு வாங்குவதாக இருக்கலாம், நிலம் வாங்குவதாக இருக்கலாம், கார் வாங்குவதாக இருக்கலாம், வங்கி இருப்பு குறிப்பிட்ட தொகையை எட்ட வேண்டும் என்பதாக இருக்கலாம்.
திட்டமிட்டுச் செயல்பட்டால் இத்தகைய கனவுகளை ஒருநாள் நனவாக்க முடியும். உதாரணமாக, முதலீட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
பல்வேறுபட்ட விதங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்வது உங்களது வருமானத்தை அதிவேகமாக அதிகரிக்கும் ஒரு நிச்சயமான வழி ஆகும். ஆனால் உங்கள் பணத்தை அதிவேகமாக வளர்ப்பதற்கு புத்திசாலித்தனமான முதலீடு முக்கியம்.
அது என்ன புத்திசாலித்தனமான முதலீடு, அதன் அம்சங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்...
* முதலீடு செய்வதற்கு முன்னர், உங்கள் முதலீட்டில் இருந்து நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றித் தெளிவாக இருக்க வேண்டும்.
* ஒருவர் முதலீட்டு செயல்முறையைத் தொடங்குவதற்கு முன்பே நிகரச் சொத்துகள் மற்றும் கடன் களைக் கணக்கிடுவது முக்கியம். தற்போதைய முதலீடுகளைப் பற்றி நீங்கள் அறிந்திருந்தால், உங்கள் பணத்தை அறிவுப்பூர்வமாக முதலீடு செய்வது எளிதாக இருக்கும்.
* முதலீடு குறித்த முறையான ஆராய்ச்சி முக்கியம். நீங்கள் முதலீடு செய்யும் துறையைப் பற்றிய தெளிவான அறிவு பெறும்வரை முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
* முதலீட்டில் சோதனை முயற்சி வேண்டாம். எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால், பங்குச் சந்தை எங்கு செல்லும் என்பதை ஊகிக்க முயற்சிக்க வேண்டாம். இன்றே முதலீடு செய்து உங்கள் முதலீட்டுத் தொகையை விரிவாக்கவும்.
* நீங்கள் முதலீடு செய்வதற்குப் புதியவராக இருந்தால், நீங்கள் அறிந்திருக்கும் துறைகளில் முதலீடு செய்வது எப்போதும் பாதுகாப்பானது. இது நல்ல முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவும்.
* பல்வேறு பிரிவுகளில் முதலீடு செய்யுங்கள். இதனால் ஒன்றில் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும், மற்றொன்றில் இருந்து கிடைக்கும் லாபத்தால் அந்த நஷ்டம் ஈடு செய்யப்படும்.
* உங்கள் முதலீடுகளின் செயல் திறனைச் சரிபார்க்க வழக்கமான இடைவெளியில் எப்போதும் உங்கள் ‘போர்ட்போலியோ’ செயல்திறனைக் கண்காணிக்கவும். மேலும், திருமணம் போன்ற சிறப்புச் சந்தர்ப்பங்களில் ஒரு பகுப்பாய்வு தேவைப்படலாம்.
* சில முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில் பணவீக்கத்தின் தாக்கத்தைப் புரிந்து கொள்கிறார்கள். உங்கள் வருமானம் மற்றும் முதலீடுகளின் உண்மையான மதிப்பை அறிய பணவீக்கத்தின் காரணியை அறிந்துகொள்ளுங்கள்.
* ஒரு சில முதலீடுகள் உடனடியாகப் பணம் எடுக்கக்கூடியதாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். எந்த ஓர் அவசர சூழ்நிலையிலும் அத்தகைய முதலீடு உங்களுக்குக் கைகொடுக்கும். உங்கள் எல்லா நிதியையும் நீண்டகால முதலீடாக வைத்துக்கொள்ள வேண்டாம்.
* முதலீடு பற்றிய முடிவுகளை எடுக்கும்போது உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். முதலீடு தொடர்பான இத்தகைய முடிவுகளை யதார்த்தமாகவும், அறிவார்ந்த விதத்திலும் எடுங்கள். எப்போதும் உங்கள் எதிர்பார்ப்புகள் யதார்த்தமாக இருக்க வேண்டும். ஒருபோதும் வானத்தில் கோட்டை கட்ட நினைக்க வேண்டாம். யதார்த்தமில்லாத எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்ட நிதி இலக்குகளை எட்ட முடியாது என்பதை உணருங்கள்.
திட்டமிட்டுச் செயல்பட்டால் இத்தகைய கனவுகளை ஒருநாள் நனவாக்க முடியும். உதாரணமாக, முதலீட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
பல்வேறுபட்ட விதங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்வது உங்களது வருமானத்தை அதிவேகமாக அதிகரிக்கும் ஒரு நிச்சயமான வழி ஆகும். ஆனால் உங்கள் பணத்தை அதிவேகமாக வளர்ப்பதற்கு புத்திசாலித்தனமான முதலீடு முக்கியம்.
அது என்ன புத்திசாலித்தனமான முதலீடு, அதன் அம்சங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்...
* முதலீடு செய்வதற்கு முன்னர், உங்கள் முதலீட்டில் இருந்து நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றித் தெளிவாக இருக்க வேண்டும்.
* ஒருவர் முதலீட்டு செயல்முறையைத் தொடங்குவதற்கு முன்பே நிகரச் சொத்துகள் மற்றும் கடன் களைக் கணக்கிடுவது முக்கியம். தற்போதைய முதலீடுகளைப் பற்றி நீங்கள் அறிந்திருந்தால், உங்கள் பணத்தை அறிவுப்பூர்வமாக முதலீடு செய்வது எளிதாக இருக்கும்.
* முதலீடு குறித்த முறையான ஆராய்ச்சி முக்கியம். நீங்கள் முதலீடு செய்யும் துறையைப் பற்றிய தெளிவான அறிவு பெறும்வரை முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
* முதலீட்டில் சோதனை முயற்சி வேண்டாம். எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால், பங்குச் சந்தை எங்கு செல்லும் என்பதை ஊகிக்க முயற்சிக்க வேண்டாம். இன்றே முதலீடு செய்து உங்கள் முதலீட்டுத் தொகையை விரிவாக்கவும்.
* நீங்கள் முதலீடு செய்வதற்குப் புதியவராக இருந்தால், நீங்கள் அறிந்திருக்கும் துறைகளில் முதலீடு செய்வது எப்போதும் பாதுகாப்பானது. இது நல்ல முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவும்.
* பல்வேறு பிரிவுகளில் முதலீடு செய்யுங்கள். இதனால் ஒன்றில் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும், மற்றொன்றில் இருந்து கிடைக்கும் லாபத்தால் அந்த நஷ்டம் ஈடு செய்யப்படும்.
* உங்கள் முதலீடுகளின் செயல் திறனைச் சரிபார்க்க வழக்கமான இடைவெளியில் எப்போதும் உங்கள் ‘போர்ட்போலியோ’ செயல்திறனைக் கண்காணிக்கவும். மேலும், திருமணம் போன்ற சிறப்புச் சந்தர்ப்பங்களில் ஒரு பகுப்பாய்வு தேவைப்படலாம்.
* சில முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில் பணவீக்கத்தின் தாக்கத்தைப் புரிந்து கொள்கிறார்கள். உங்கள் வருமானம் மற்றும் முதலீடுகளின் உண்மையான மதிப்பை அறிய பணவீக்கத்தின் காரணியை அறிந்துகொள்ளுங்கள்.
* ஒரு சில முதலீடுகள் உடனடியாகப் பணம் எடுக்கக்கூடியதாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். எந்த ஓர் அவசர சூழ்நிலையிலும் அத்தகைய முதலீடு உங்களுக்குக் கைகொடுக்கும். உங்கள் எல்லா நிதியையும் நீண்டகால முதலீடாக வைத்துக்கொள்ள வேண்டாம்.
* முதலீடு பற்றிய முடிவுகளை எடுக்கும்போது உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். முதலீடு தொடர்பான இத்தகைய முடிவுகளை யதார்த்தமாகவும், அறிவார்ந்த விதத்திலும் எடுங்கள். எப்போதும் உங்கள் எதிர்பார்ப்புகள் யதார்த்தமாக இருக்க வேண்டும். ஒருபோதும் வானத்தில் கோட்டை கட்ட நினைக்க வேண்டாம். யதார்த்தமில்லாத எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்ட நிதி இலக்குகளை எட்ட முடியாது என்பதை உணருங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X