search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மறக்கக்கூடாதவை
    X

    பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மறக்கக்கூடாதவை

    பெண்களே வீட்டிலிருந்து புறப்படும் முன் சிலவற்றை மறக்காமல் செய்யப் பழக வேண்டும். வெளியில் செல்லும் போது பெண்கள் மறக்காமல் செய்ய வேண்டியவற்றை அறிந்து கொள்ளலாம்.
    எங்காவது புறப்படுவது போதெல்லாம் கடிகாரம் வேகமாக சுற்றுவது போல இருக்கும். என்னது ஒன்பது மணியாடுச்சா" என சத்தமாகவே சொல்லிக் கொண்டு, அவசர அவசரமாக டிபனைச் சாப்பிட்டு விட்டு, வீட்டை விட்டு கிளம்பி பஸ் ஸ்டாப்புக்கு கிட்டத் தட்ட ஓடிவோம்.

    நெருக்கியடித்து பஸ்ஸில் ஏறி, டிக்கெட் எடுக்கும் போது தான் 'வீட்டை ஒழுங்காக பூட்டினோமா' என்கிற சந்தேகம் வரும். பிறகு, சந்தேகங்கள் ஒவ்வொன்றாக அதிகரித்து விடும். அது மெல்ல பதட்டத்தை அதிகரிக்கச் செய்து, அடுத்த பஸ் ஸ்டாப்பில் இறங்கி, வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்து விடுவோம்.

    இது அடிக்கடி நடந்தால் அலுவகலமோ வெளியிலோ செல்லும் போதெல்லாம் டென்ஷன் தான். அதனால் வீட்டிலிருந்து புறப்படும் முன் சிலவற்றை மறக்காமல் செய்யப் பழகலாமே பெண்களே!

    * சிலிண்டரிலிருந்து கேஸ் அடுப்புக்குச் செல்லும் ரெகுலேட்டரை ஆஃப் பண்ண வேண்டும். வழக்கமாக எல்லோரும் சொல்வது தான். ஆனால் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால், சேதமும் அதிகமாகும் அல்லவா. அதனால் சமையல் வேலைகள் முடிந்ததும் மறக்காமல் ரெகுலேட்டரை ஆஃப் செய்து விடுங்கள். ஒரு வேளை அப்படியே செய்தாலும் வீட்டிலிருந்து புறப்படும் முன் அவசியம் அதை செக் பண்ணத் தவறாதீர்கள்.

    * பாத்ரூம், கழிவறை, சமையலறை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் தண்ணீர் டேப்களை நீர் சொட்டாமல் மூடப்பட்டிருக்கிறதா எனப் பாருங்கள். ஏனெனில் ஒவ்வொரு சொட்டாக சொட்டினால் நீங்கள் திரும்ப வருவதற்குள் வாளிக் கணக்கில் நீர் விரயமாயிருக்கும். நீரைச் சேமிப்பது நமது கடமையும் அல்லவா.



    * சமையல் செய்யும் போது சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பாத்திரங்களை அவசரத்தில் மூடாமல் மறந்திருப்பீர்கள். அதனால் சமையல் முடிந்த பிறகோ, வீட்டிலிருந்து புறப்படும் முன்போ மறக்காமல் செக் பண்ணாவிட்டால், எறும்பு, பூச்சிகள் புகுந்து பொருட்கள் கெட்டுவிடும்.

    * பலரின் வீட்டில் குடும்ப உறுப்பினர் போல ஆகி விட்டது பிரிட்ஜ். ஆனால், அது கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறது என்பதற்காக சில பொருட்களை, பல நாட்களாக அதிலே வைத்திருப்பீர்கள். அதிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியிருக்கும். அதை குப்பையில் எறிய வேண்டும் என நினைத்து மறந்திருப்பீர்கள். ஆனால் வெளியே சென்று வர பல மணிநேரமாகும் எனில் அதை பிரிட்ஜைத் திறந்து ஒருமுறை செக் பண்ணி விடுவதே நல்லது.

    * பீரோவைத் திறந்திருப்போம் ஏதோ நினைவில் சாவியை பீரோவிலேயே வைத்திருப்பீர்கள். பிறகு மற்ற வேலைகளில் மூழ்கியிருப்பீர்கள். அது இயல்பு தான். ஆனால், வெளியே புறப்படும் போது, அப்படி இருப்பது நல்லதல்ல. அதனால் மறக்காமல் அதைப் பத்திரப்படுத்துங்கள்.

    * புறப்படும் முன் வீட்டுக்குள் ஏதேனும் மறந்து விட்டோமா என்று சுற்றிப் பார்ப்பதுடன் வெளியே வந்து விடுவீர்கள். ஆனால் வீட்டின் வேறு பகுதியில் துணியைக் காயப் போட்டிருந்தால், அதுவும் வெளியிருந்து யாரேனும் எடுக்கும் வசதியில் இருந்தால் அவசியம் அதை எடுத்து விடுங்கள். அது, உங்களுக்கோ வீட்டினருக்கோ மிக விருப்பமான உடைகளாக கூடவே இருக்கக் கூடும்.

    * அயர்ன் பண்ணும் போதோ, மிக்ஸியில், கிரைண்டரில் அரைக்கும் போதோ, மின்சாரம் போயிருக்கும் ஏதோ நினைவில் ஸ்விட்சை ஆஃப் பண்ண மறந்திருப்பீர்கள். வீட்டிலிருந்து புறப்படும் வரை மின்சாரம் வந்திருக்காது. அதனால் அப்படியே விட்டு விட்டுப் போய் விடுவீர்கள். அதனால் புறப்படும் முன் ஸ்விட்ச் போர்டு அனைத்தையும் செக் பண்ண மறக்காதீர்கள். இது போன்ற மின் சாதனப் பொருட்களில் நீர் பட்டு அல்லது நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தாமல்
    திரும்பவும் பயன்படுத்தும் போது என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    * கடைசியாக, வாசல் கதவைப் பூட்டும் போது, பதட்டத்தில் சரியாக பூட்டாமல் விடுவோர் அதிகம். அதனால், அந்த பத்து நொடிகளை மிகவும் நிதானமாக இருப்பது பெரும் நிம்மதியைக் கொடுக்கும். அதோடு சாவியை உங்களின் ஹேண்ட் பேக்கில் பத்திரப்படுத்தவும் மறக்காதீர்கள்.
    Next Story
    ×