search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பாலியல் வன்முறையில் சிறுமிகள் பாதிக்கப்படுவது அதிகரிப்பு
    X

    பாலியல் வன்முறையில் சிறுமிகள் பாதிக்கப்படுவது அதிகரிப்பு

    பாலியல் பலாத்காரங்களில் சிக்கும் சிறுமிகளின் எண்ணிக்கை பொதுவாக ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பாலியல் பலாத்காரங்களில் சிக்கும் சிறுமிகளின் எண்ணிக்கை பொதுவாக ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

    நாடு முழுவதும் கடந்த 2004-ம் ஆண்டு பதிவான பாலியல் பலாத்கார வழக்குகளில் 19.9 சதவீதம் சிறுமிகள் சம்பந்தப்பட்டவை ஆகும்.

    2005-ல் இது 22.2 சதவீதமாகவும், 2006-ல் 25.6 சதவீதமாகவும் அதிகரித்தது. 2007-ல் 24.7 சதவீதமகவும் 2008-ல் 25.4 சதவீதமாகவும், 2009-ல் 25.1 சதவீதமாகவும், 2010-ல் 25 சதவீதமாகவும், 2011-ல் 29.8 சதவீதமாகவும், 2012-ல் 36.5 சதவீதமாகவும், 2013-ல் 39.4 சதவீதமாகவும், 2014-ல் 38.6 சதவீதமாகவும், 2015-ல் 32.8 சதவீதமாகவும், 2016-ல் 43.2 சதவீதமாகவும் இருந்தது.

    சில ஆண்டுகளில் மட்டும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்குகள் குறைந்த போதிலும், மொத்தத்தில் அதிகரித்தே வருகிறது.

    2016-ம் ஆண்டு நிலவரப்படி, நாடு முழுவதும் 1 லட்சத்து 52 ஆயிரத்து 165 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இதில் 18 ஆயிரத்து 552 வழக்குகளில் விசாரணை முடிந்து 4,739 பேர் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதாவது, 25.5 சதவீதம் பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டு உள்ளனர். 13 ஆயிரத்து 813 பேர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

    அதே 2016-ம் ஆண்டு நிலவரப்படி, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக இந்தியா முழுவதும் 2 லட்சத்து 27 ஆயிரத்து 739 வழக்குகள் இருந்தன. இதில் 22 ஆயிரத்து 763 வழக்குகளில் விசாரணை முடிந்து 6,991 வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்கள். அதாவது 30.7 சதவீத வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு உள்ளனர். 15 ஆயிரத்து 772 வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். 
    Next Story
    ×