search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    திருமண பந்தம் முறிவதற்கான காரணங்கள்
    X

    திருமண பந்தம் முறிவதற்கான காரணங்கள்

    கணவன் - மனைவிக்கு இடையேயான அன்யோன்யம், அன்பு. ஆனால், இவை மெள்ள மெள்ள காலாவதியாகிவருவதுதான் மணமுறிவுச் சிக்கலுக்கான அடிப்படையாகும்.
    வரதட்சணை, ஆண்மைக்குறைபாடு என எத்தனையோ இருந்தாலும், முக்கியமாக நான்குதான் இந்தியாவில் அதிகரித்துவரும் விவாகரத்துகளுக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம், விருப்பமில்லா திருமணம், திருமணத்துக்கு வெளியே உறவு (Adultery), வேடிக்கையை விரும்பும் இன்றைய தலைமுறை (Fun-Loving Generation). திருமண பந்தம் எளிதாக முறிவுக்கு வருவதற்கு இவையெல்லாம் காரணங்கள் என்பது வியப்பாகத்தான் இருக்கிறது. ஈகோ, தம்பதியரிடம் விரிசல் முற்றுவதற்கு முக்கிய அடிப்படையாகிறது. சகிப்புத் தன்மை வெகுவாகக் குறைந்துபோய்விட்டது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால், மணமுறிவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

    * சிறு வயது முதலே உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாதவர்களாக (அவர்கள் பெற்றோர்கள் உணர்வு வெளிப்பாட்டை கண்டித்திருப்பதால்கூட இருக்கலாம்) இருப்பதும் ஒரு காரணமாகியிருக்கலாம்.

    * உடல்ரீதியாக தாய்-தந்தையரைவிட்டுப் பிரிந்திருந்தாலும், மனதளவில் பிரிய முடியாமல் இருப்பதால் ஏற்படும் சிக்கல்.

    * சந்தேக உணர்வு அதிகமாக இருப்பவர்களுக்கும் புரிதலில் சிக்கல் வரும்.

    * 30 வயதுக்கு மேல் திருமணம் நடப்பவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குறைவாகவும், புரிதலில் சிக்கலும் ஏற்படலாம்.



    * கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால், அவர்களிடையே மன ஒற்றுமை சீர்குலைய வழி ஏற்படலாம்.

    * கணவர், அவர் பெற்றோருக்கு ஒரே குழந்தையாக இருந்து, மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டதினாலேயேகூட இருவருக்கும் புரிதல் இல்லாமல் போகக்கூடும்.

    * திருமணம் ஆன உடனேயே குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதால், மண வாழ்க்கையில் பக்குவப்படுவதற்கு முன்னதாகவே பெற்றோர்கள் ஆகிவிடும்போது சிக்கல் ஆரம்பித்துவிடுகிறது.

    * திருமணத்துக்குப் பிறகு குழந்தைப்பேறு அமையாதது மணமுறிவுக்கு முக்கியக் காரணம்.

    * பாலியல் பிரச்சனைகள் மற்றும் திருமணத்துக்கு வெளியே உறவு வைத்திருப்பது, குடி அல்லது போதைப் பழக்கம் போன்ற காரணங்களும் விவாகரத்துக்குக் காரணங்களாகின்றன.

    சகிப்புத்தன்மையும் விட்டுக்கொடுத்தலும் உறவுக்கு வலு சேர்க்கும்! அதிகமாகும் விவாகரத்துக்கு முட்டுக்கட்டை போடும்! அந்த நல்லப் பழக்கத்தை முதலில் கடைப்பிடிக்கப் பழகுவோம்!
    Next Story
    ×