என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
விபத்துகளை தடுக்க தேவை விழிப்புணர்வு
Byமாலை மலர்29 March 2018 4:07 AM GMT (Updated: 29 March 2018 4:07 AM GMT)
அதிகரித்திருக்கும் வாகன பெருக்கத்தாலும், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறுவதாலும் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
* இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எங்கும், எப்போது வேண்டுமானாலும் விபத்து நிகழலாம். அதிகரித்திருக்கும் வாகன பெருக்கத்தாலும், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறுவதாலும் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
* இருசக்கர வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். மிதவேகம் மிக நன்று என்பதை மனதில் கொண்டு மெதுவாக பயணம் செய்யுங்கள். தொடர்ச்சியாக நீண்ட தூரம் வாகனம் ஓட்டி பயணம் செய்வதை தவிருங்கள்.
* வாகன ஓட்டுநர்கள் சாலையின் இடதுபுறத்திலேயே வாகனங்களைச் செலுத்த வேண்டும். குறுக்குச்சாலை அல்லது பாதசாரிகள் கடக்கும் இடங்களில் வண்டியின் வேகத்தைக் குறைத்துச்செல்ல வேண்டும்.
* வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக செல்போன் பேசுவதை தவிர்த்து விடுங்கள். தவிர்க்க முடியாத சமயங் களில் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு பேசுங்கள்.
* செல்போன் பேசிக்கொண்டே சாலைகள், ரெயில்வே தண்டவாளத்தை கடப்பது ஆபத்தானது. இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பல வாகன ஓட்டிகள் நிதானமான வேகத்தை கடைப்பிடிப்பதில்லை. வேகமாக ஓட்டுவதால் அவர்களுக்கும், அதைவிட அதிகமாக பிறருக்கும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
* சாலை விதிகள் நமக்கு அல்ல, அடுத்தவர்களுக்குத்தான் என்கிற மனப்பான்மை பொதுவாக எல்லாரிடமும் இருக்கிறது. சாலை விதிகள் நம் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டவை என்பதை அனைவரும் உணர வேண்டும். இதுவே விபத்துகளுக்கு வழி வகுக்கிறது.
* இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது விளையாட்டாக பேசிக் கொண்டே போகாதீர்கள். தீயணைப்பு வாகனம், அவசர ஊர்தி மற்றும் ஆம்புலன்ஸ் வண்டி போன்றவைகளுக்கு வாகன ஓட்டுநர்கள் தடையின்றி வழிவிடுதல் அவசியமாகும்.
* வாகன ஓட்டுநர் தனக்குமுன் செல்லும் வாகனத்திற்கும், தனது வாகனத்திற்கும் குறிப்பிட்ட அளவு இடைவெளி இருக்குமாறு சென்றால், வண்டிகள் மோதிக்கொள்வதை தவிர்க்கலாம்.
* போக்குவரத்து விளக்குகளில் சிவப்பு விளக்கு எரிந்தால் நில், செல்லாதே என்றும், மஞ்சள் விளக்கு எரிந்தால் சாலையைக் கடக்கத் தயாராக இரு என்றும், பச்சை விளக்கு எரிந்தால் செல் என்றும் அறிவிக்கின்றது.
* சீக்கிரமாக குறித்த இலக்கினை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாகச் செல்வது விபத்து நடக்க காரணமாகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதும் பெரும்பான்மையான விபத்துகளுக்கு முக்கிய காரணமாகும்.
* 18 வயதிற்கு உட்பட்டவர்கள் இரண்டு சக்கர வாகனத்தையோ, நான்கு சக்கர வாகனத்தையோ ஓட்டுதல் கூடாது. மேலே கூறிய விதிமுறைகளை முறைப்படி கடைப்பிடிப்பதன் மூலம் சாலை விபத்துகளை தவிர்ப்போம். உயிர்களை காப்போம்..!
* இருசக்கர வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். மிதவேகம் மிக நன்று என்பதை மனதில் கொண்டு மெதுவாக பயணம் செய்யுங்கள். தொடர்ச்சியாக நீண்ட தூரம் வாகனம் ஓட்டி பயணம் செய்வதை தவிருங்கள்.
* வாகன ஓட்டுநர்கள் சாலையின் இடதுபுறத்திலேயே வாகனங்களைச் செலுத்த வேண்டும். குறுக்குச்சாலை அல்லது பாதசாரிகள் கடக்கும் இடங்களில் வண்டியின் வேகத்தைக் குறைத்துச்செல்ல வேண்டும்.
* வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக செல்போன் பேசுவதை தவிர்த்து விடுங்கள். தவிர்க்க முடியாத சமயங் களில் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு பேசுங்கள்.
* செல்போன் பேசிக்கொண்டே சாலைகள், ரெயில்வே தண்டவாளத்தை கடப்பது ஆபத்தானது. இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பல வாகன ஓட்டிகள் நிதானமான வேகத்தை கடைப்பிடிப்பதில்லை. வேகமாக ஓட்டுவதால் அவர்களுக்கும், அதைவிட அதிகமாக பிறருக்கும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
* சாலை விதிகள் நமக்கு அல்ல, அடுத்தவர்களுக்குத்தான் என்கிற மனப்பான்மை பொதுவாக எல்லாரிடமும் இருக்கிறது. சாலை விதிகள் நம் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டவை என்பதை அனைவரும் உணர வேண்டும். இதுவே விபத்துகளுக்கு வழி வகுக்கிறது.
* இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது விளையாட்டாக பேசிக் கொண்டே போகாதீர்கள். தீயணைப்பு வாகனம், அவசர ஊர்தி மற்றும் ஆம்புலன்ஸ் வண்டி போன்றவைகளுக்கு வாகன ஓட்டுநர்கள் தடையின்றி வழிவிடுதல் அவசியமாகும்.
* வாகன ஓட்டுநர் தனக்குமுன் செல்லும் வாகனத்திற்கும், தனது வாகனத்திற்கும் குறிப்பிட்ட அளவு இடைவெளி இருக்குமாறு சென்றால், வண்டிகள் மோதிக்கொள்வதை தவிர்க்கலாம்.
* போக்குவரத்து விளக்குகளில் சிவப்பு விளக்கு எரிந்தால் நில், செல்லாதே என்றும், மஞ்சள் விளக்கு எரிந்தால் சாலையைக் கடக்கத் தயாராக இரு என்றும், பச்சை விளக்கு எரிந்தால் செல் என்றும் அறிவிக்கின்றது.
* சீக்கிரமாக குறித்த இலக்கினை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாகச் செல்வது விபத்து நடக்க காரணமாகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதும் பெரும்பான்மையான விபத்துகளுக்கு முக்கிய காரணமாகும்.
* 18 வயதிற்கு உட்பட்டவர்கள் இரண்டு சக்கர வாகனத்தையோ, நான்கு சக்கர வாகனத்தையோ ஓட்டுதல் கூடாது. மேலே கூறிய விதிமுறைகளை முறைப்படி கடைப்பிடிப்பதன் மூலம் சாலை விபத்துகளை தவிர்ப்போம். உயிர்களை காப்போம்..!
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X