search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்கள் மாதவிடாயின் போது உறிபஞ்சுகளை பயன்படுத்தலாமா?
    X

    பெண்கள் மாதவிடாயின் போது உறிபஞ்சுகளை பயன்படுத்தலாமா?

    மாதவிடாய் காலத்தின்போது வெளியாகும் இரத்தத்தை வெளியேறவிடாமல் இந்த உறிபஞ்சுகள் உள்ளேயே உறிஞ்சுக்கொள்கிறது. இந்த உறிபஞ்சுகளை பயன்படுத்துவது தனிநபர் விருப்பம் என்பதால், தகவலுக்காக இதனை பதிவு செய்கிறோம்.
    சானிட்டரி நாப்கின்களின் நாள்பட்ட பயன்பாடும், டையாக்சினும் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை கூட உண்டாக்கலாம். பொதுவாக பிளாஸ்டிக்கை அடிப்படையாக கொண்ட பல்வேறு வேதிப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் தற்கால சானிட்டரி நாப்கின்கள் பெண்களுக்கு நல்லதைவிட அதிகளவில் தீங்கையே விளைவிக்கிறது. பல வருடங்களாக சானிட்டரி நேப்கின்களை பயன்படுத்துபவர்களுக்கே அதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் சுகாதார பிரச்சனைகளுக்கு உள்ளாவது அடிக்கடி நடக்கிறது.

    சானிட்டரி நாப்கின்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் பெண்களுக்கு அரிப்பு, தோல் கருப்படைதல், பல்வேறு விதமான அலர்ஜிகள் மட்டுமின்றி மாதவிடாய் காலத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதால் வெள்ளைப்படுதல் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    மாதவிடாய் காலத்தின்போது பெண்கள் நான்கு மணிநேரங்களுக்கு ஒரு சானிட்டரி நேப்கின் வீதம் ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு சானிட்டரி நேப்கின்களை பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆனால், பெரும்பாலான பெண்கள் காலை முதல் இரவுவரை ஒரே நாப்கின்னை பயன்படுத்துவது மிக அதிகபட்சமாக புற்றுநோயை கூட உண்டாக்கலாம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனினும், நடுத்தர, ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களால் ஒரு நாளைக்கு இத்தனை நாப்கின்களை பயன்படுத்துவெதெல்லாம் பொருளாதாரரீதியாக சாத்தியமே இல்லை.

    மாதவிடாய் காலத்தின்போது வெளியாகும் இரத்தத்தை வெளியேறவிடாமல் இந்த உறிபஞ்சுகள் உள்ளேயே உறிஞ்சுக்கொள்கிறது. இதனால் பெண்களால் எப்போதும் போல இயல்பாக செயல்பட முடிவது இதன் சிறப்பம்சமாக கூறப்படுகிறது. இந்த உறிபஞ்சுகளை பயன்படுத்துவது தனிநபர் விருப்பம் என்பதால், தகவலுக்காக இதனை பதிவு செய்கிறோம்.



    செல்லுலோஸ் அல்லது பருத்தியை கொண்டோ அல்லது இரண்டையுமே சேர்த்தோ தயாரிக்கப்படும் இந்த மாதவிடாய் உறிபஞ்சுகள் ஒருவரது இரத்தம் வெளியேறும் அளவை பொறுத்து பல வகைகளில் சந்தைகளில் கிடைக்கின்றன.

    பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஏற்படக்கூடிய மாதவிடாய் சுழற்சியின்போது வெளியாகும் இரத்தத்தை சேகரிப்பதற்கும், சுகாதாரத்தை பேணுவதற்கும் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், பொதுவாக பிளாஸ்டிக்கை கொண்டு உருவாக்கப்படும் சானிட்டரி நேப்கின்களாகதான் உள்ளது. அது சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி பெண்களின் ஆரோக்கியத்துக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

    இதற்கு மாற்றாக தற்போது (Tampon) உறிபஞ்சுகள் வந்துள்ளன. அதனை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி எளியமுறையில் பார்க்கலாம். பெண்களுக்கு சுமார் 12 வயது முதல் 50 வயது வரை ஒவ்வொரு மாதமும் ஏற்படக்கூடிய மாதவிடாய் சுழற்சியின்போது வெளியாகும் இரத்தத்தை சேகரிப்பதற்கும், சுகாதாரத்தை பேணுவதற்கும் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர்.

    ஆனால், பொதுவாக பிளாஸ்டிக்கை கொண்டு உருவாக்கப்படும் சானிட்டரி நேப்கின்களாகதான் உள்ளது. அது சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி பெண்களின் ஆரோக்கியத்துக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதற்கு மாற்றாக தற்போது (Tampon) உறிபஞ்சுகள் வந்துள்ளன. அதனை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி எளியமுறையில் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.



    முதலில் கைகளை தண்ணீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் மாதவிடாய்க்கு பயன்படுத்தும் உறிபஞ்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பின்னர் டாய்லெட்டுக்கு சென்று ஒரு காலை மடக்கி மற்றொரு கால்ளை விரித்து Tampon உறிபஞ்சை உங்களது வெர்ஜின் பகுதியில் உள்ளேசெலுத்த வேண்டும். இந்த உறிபஞ்சுகளை உபயோக படுத்திய பின்பு பாதுகாப்பாக அதனை அப்புறப்படுத்த வேண்டும். டாய்லெட்டில் ஃப்ளஷ் பண்ணக்கூடாது.

    Tampon உறிபஞ்சை உட்செலுத்திய பின்னர் நீங்கள் அசவுகரியமாக உணர்ந்தால், அது சரியாக உட்செலுத்தப்படவில்லை என்று அர்த்தம். அதனால் அதை உடனே அகற்றிவிட்டு புதிய உறிபஞ்சை எடுத்து சரியாக உள்ளே செலுத்த வேண்டும். இதை சரியாக செலுத்திய பின்னர் எந்தவித உறுத்தலும் அசௌகரியமும ஏற்படாது.

    ஆனாலும் சானிட்டரி நாப்கின்களுக்கு மாற்றாக முன்வைக்கப்படும் மாதவிடாய் உறிபஞ்சுகளுக்கு மாறுவதற்கு பெண்களிடையே இருக்கும் தயக்கத்து அவை குறித்த பிரபலமின்மையும், விழிப்புணர்வின்மையுமே காரணம்.

    Next Story
    ×