search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பூசி மூலம் தடுக்கலாம்
    X

    கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பூசி மூலம் தடுக்கலாம்

    பெண்களை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகமாக தாக்குகிறது. இதை தடுக்க தடுப்பூசி போட்டு கொள்ளலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ‘செர்விகல் கார்சினோமா’ (Cervical carcinoma) எனப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உண்டாவதற்கு, ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (Human Papilloma Virus) காரணம்.

    இது ஆணிடம் இருந்து பெண்ணுக்குத் தாம்பத்ய உறவின் மூலம் பரவுகிறது. இந்த வைரஸ் மனித உடலில் இருந்தாலும், எல்லோருக்கும் இது பிரச்னையை உண்டாக்குவது இல்லை. உடலிலேயே தங்கும்போது அல்லது எதிர்ப்புச் சக்தி குறையும்போதுதான், இந்த வைரஸ் வீரியத்துடன் தாக்கும். இந்தப் புற்றுநோய் திடீரென்று ஒருநாளில் தோன்றுவது இல்லை. வைரஸ் கிருமிகள் உடலில் நுழைந்து திசுக்களில் மாறுதல்களை ஏற்படுத்தி, பல வருடங்கள் கழித்தே புற்றுநோயாக வெளிபடும். அதற்குள், அதைக் கண்டுபிடித்து, தொடர்ந்து சிகிச்சை எடுத்தால், முற்றிலுமாகக் குணப்படுத்திவிடலாம்.

    சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொண்டால் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க முடியும். சுற்றுப்புறம் தூய்மையாக இல்லாததே எல்லா நோய்களுக்கும் முக்கிய காரணமாகும். பெண்களை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகமாக தாக்குகிறது. இதை தடுக்க தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.

    புற்றுநோய் வந்திருக்கிறது என்பதை முதல் நிலையில் கண்டறிந்தால் 95 சதவீதம் காப்பாற்ற முடியும். 2-வது நிலை என்றால் 60 சதவீதமும், 3-வது நிலை என்றால் 40 சதவீதமும் காப்பாற்ற முடியும். முற்றிப்போன நிலையில் புற்றுநோய் கண்டறியப்பட்டால் குணப்படுத்துவது கடினம். மார்பகத்தில் கட்டி இருந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வாய், குடல், தொண்டை, மூளை, எலும்பு போன்றவற்றிலும் புற்றுநோய் வரும்.

    புகையிலையால் புற்றுநோய் ஏற்படும். எனவே உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு புகைப்பழக்கம், குடிப்பழக்கம் இருந்தால் அதை நிறுத்த சொல்ல வேண்டும். கிராமப்புற பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய், மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    பாப்ஸ்மியர் (Papsmear), வயா, வில்லி (VIA,VILI) பரிசோதனைகள் மூலம், திசுக்களில் ஏற்படும் மாறுதல்களைக் கண்டறிய முடியும். மாறுதல்கள் ஏற்பட்டிருக்கும்பட்சத்தில் CRYO என்ற எளிதான முறையில், சரிசெய்துவிடலாம். அல்லது அந்த இடத்தை அறுவைசிகிச்சை மூலம் நீக்கிவிடலாம். சிகிச்சைக்குப் பிறகும்கூட, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பாப்ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

    தடுப்பூசி: இந்த வைரஸ் கிருமி உடலுக்குள் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தடுப்பதற்கு, தடுப்பூசி உள்ளது. பெண்குழந்தைகள் அனைவருக்கும், 10 முதல் 11 வயதுக்குள் இந்த ஊசியைப் போடவேண்டும்.

    ஆறு மாதங்களுக்குள் மூன்று முறை போடவேண்டும். இந்த வயதில் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தவறியவர்கள், 45 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். இது முதல்நிலைத் தடுப்பாகச் செயல்படும். தடுப்பூசி போடப்படும் குழந்தைகளுக்கு, திருமண வயது வரும்போது, பாப்பிலோமா வைரஸை எதிர்க்கும் அளவுக்கு எதிர்ப்புச் சக்தி உருவாகிவிடும்.

    பெண்கள், கர்ப்பப்பையில் தொற்றுகள், தொடர்ந்து வெள்ளைப்படுதல் இருந்தால் அதை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரிடம் போய் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மரபு வழியில் வருவதற்கு வாய்ப்பு இல்லை. அறிகுறிகள் இருந்தால்தான் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பது இல்லை. மணமான பெண்கள் அனைவரும் 3 வருடங்களுக்கு ஒருமுறை கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.  அவ்வாறு முடியாவிட்டால், 35 வயது முதல் 45 வயதுக்குள் ஒரு முறையேனும் பாப்ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 
    Next Story
    ×