என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பெண்களை மிரட்டும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
Byமாலை மலர்24 March 2018 2:51 AM GMT (Updated: 24 March 2018 2:51 AM GMT)
பெண்களை மிரட்டும் புற்றுநோய்களில் ஒன்றாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பெண்களை மிரட்டும் புற்றுநோய்களில் ஒன்றாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளது. உலகெங்கிலும் ஆண்டுதோறும் 2 லட்சத்து 50 ஆயிரம் பெண்களின் உயிரை இந்நோய் பறிக்கிறது.
99 சதவீதம் கர்ப்பப்பைவாய் புற்றுநோய், ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற நுண்கிருமியால் உண்டாகிறது.
இந்நிலையில், உலகில் கர்ப்பப்பைவாய் புற்று நோயில்லாத முதல் நாடு என்ற பெயரை ஆஸ்திரேலியா பெறக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நோய்க்கு எதிராக ஆஸ்திரேலியாவில் 2007-ம் ஆண்டு ஆண், பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் துவங்கப்பட்டது. அதனால் ஆஸ்திரேலியாவில் இந்நோய் பாதிப்பு கணிசமாகக் குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பத்து ஆண்டுகளில் 18 முதல் 24 வயது வரையிலான ஆஸ்திரேலிய இளம்பெண்கள் மத்தியில் இந்நோயின் விகிதம் 22.7 சதவீதத்தில் இருந்து 1.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இந்த தடுப்பூசித் திட்டத்துக்கு முன் ஆஸ்திரேலிய இளவயதினரில் அதிக எண்ணிக்கையிலானோர் இந்நோய் பாதிப்புக்கு ஆளானது அதிர்ச்சிக்குரிய தகவலாகும்.
தற்போது, குறிப்பிட்ட தடுப்பூசியினால் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியால், உலகிலேயே கர்ப்பப்பை வாய் புற்றுநோயில்லாத முதல் நாடாகும் வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கு கிடைக்க இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஆண்டுதோறும் செய்யும் மருத்துவப் பரிசோதனை மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
99 சதவீதம் கர்ப்பப்பைவாய் புற்றுநோய், ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற நுண்கிருமியால் உண்டாகிறது.
இந்நிலையில், உலகில் கர்ப்பப்பைவாய் புற்று நோயில்லாத முதல் நாடு என்ற பெயரை ஆஸ்திரேலியா பெறக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நோய்க்கு எதிராக ஆஸ்திரேலியாவில் 2007-ம் ஆண்டு ஆண், பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் துவங்கப்பட்டது. அதனால் ஆஸ்திரேலியாவில் இந்நோய் பாதிப்பு கணிசமாகக் குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பத்து ஆண்டுகளில் 18 முதல் 24 வயது வரையிலான ஆஸ்திரேலிய இளம்பெண்கள் மத்தியில் இந்நோயின் விகிதம் 22.7 சதவீதத்தில் இருந்து 1.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இந்த தடுப்பூசித் திட்டத்துக்கு முன் ஆஸ்திரேலிய இளவயதினரில் அதிக எண்ணிக்கையிலானோர் இந்நோய் பாதிப்புக்கு ஆளானது அதிர்ச்சிக்குரிய தகவலாகும்.
தற்போது, குறிப்பிட்ட தடுப்பூசியினால் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியால், உலகிலேயே கர்ப்பப்பை வாய் புற்றுநோயில்லாத முதல் நாடாகும் வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கு கிடைக்க இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஆண்டுதோறும் செய்யும் மருத்துவப் பரிசோதனை மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X