என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மன அழுத்தம் மற்றும் கருத்தரிப்பின்மை
Byமாலை மலர்10 March 2018 6:54 AM GMT (Updated: 10 March 2018 6:54 AM GMT)
பெண்களில், அதிக மன அழுத்தம் அவர்களது கருமுட்டை வெளியேறுவதில் பாதிப்பை ஏற்படுத்தும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குறைந்தது ஒரு குழந்தையை பெற்றிருக்கும் தம்பதிகளை விட குழந்தை இல்லாத தம்பதிகள் அதிகளவு மன அழுத்தத்திற்கு உள்ளாவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆண்களில், அதிக அளவு மன அழுத்தம் தரும் கார்டிகோஸ்டிராய்டு (Corticosteroids) எனும் ஹார்மோன் காரணமாக விந்தணு உற்பத்தி மற்றும் விந்தணுக்களின் தரம் குறைவது, டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவாக சுரப்பது இதன் விளைவாக விறைப்புத்தன்மை குறைவு, விந்தணு ஆரோக்கியம் பாதிப்பு போன்ற பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
பெண்களில், அதிக மன அழுத்தம் அவர்களது கருமுட்டை வெளியேறுவதில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இது அவர்களது மாதவிடாய் சுழற்சியை ஒழுங்கற்றதாக மாறச்செய்கிறது. கருமுட்டை வளர்ச்சி இன்மை ஏற்படும் மற்றும் முதிர்ச்சி அடைந்த கருமுட்டை வெளியேறுவது நடைபெறாமல் போய்விடும். இதனால் அவர்கள் கருத்தரிப்பது சாத்தியமற்றதாகி விடுகிறது.
கருத்தரிப்பின்மையைக் குணப்படுத்தும் சிகிச்சைகளை எடுத்துக் கொள்பவர்களின் மன அழுத்தம், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருப் பவர்களுக்கு இருக்கும் மன அழுத்த அளவிற்கு இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் கருத்தரிப்பின்மைக்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும்போது உளவியல்ரீதியிலான காரணங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. மன அழுத்தத்தின் அளவு கருத்தரிப்பின் வெற்றி விகிதத்தை பாதிக்கக்கூடியதாக இருக்கிறது.
ஒரு தம்பதி கருத்தரிப்புக்கான சிகிச்சைகளை ஒரு வருடத்திற்கு மேல் எடுத்துகொண்டும் கருத்தரிக்கவே இல்லை யென்றால், கருத்தரிப்பு சிறப்பு மருத்துவரைப் பார்த்து அவர்களது ஆலோசனைகளைப் பெற வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த தம்பதிக்கு இருக்கும் பிரச்னை என்னவென்று பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுவிட்டால், அதற்கான சிறந்த சிகிச்சையை அளிக்கும்போது மன அழுத்தத்திற்கான சிகிச்சையை அளிப்பதும் மிக முக்கியமாகும்.
பெண்களில், அதிக மன அழுத்தம் அவர்களது கருமுட்டை வெளியேறுவதில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இது அவர்களது மாதவிடாய் சுழற்சியை ஒழுங்கற்றதாக மாறச்செய்கிறது. கருமுட்டை வளர்ச்சி இன்மை ஏற்படும் மற்றும் முதிர்ச்சி அடைந்த கருமுட்டை வெளியேறுவது நடைபெறாமல் போய்விடும். இதனால் அவர்கள் கருத்தரிப்பது சாத்தியமற்றதாகி விடுகிறது.
கருத்தரிப்பின்மையைக் குணப்படுத்தும் சிகிச்சைகளை எடுத்துக் கொள்பவர்களின் மன அழுத்தம், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருப் பவர்களுக்கு இருக்கும் மன அழுத்த அளவிற்கு இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் கருத்தரிப்பின்மைக்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும்போது உளவியல்ரீதியிலான காரணங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. மன அழுத்தத்தின் அளவு கருத்தரிப்பின் வெற்றி விகிதத்தை பாதிக்கக்கூடியதாக இருக்கிறது.
ஒரு தம்பதி கருத்தரிப்புக்கான சிகிச்சைகளை ஒரு வருடத்திற்கு மேல் எடுத்துகொண்டும் கருத்தரிக்கவே இல்லை யென்றால், கருத்தரிப்பு சிறப்பு மருத்துவரைப் பார்த்து அவர்களது ஆலோசனைகளைப் பெற வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த தம்பதிக்கு இருக்கும் பிரச்னை என்னவென்று பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுவிட்டால், அதற்கான சிறந்த சிகிச்சையை அளிக்கும்போது மன அழுத்தத்திற்கான சிகிச்சையை அளிப்பதும் மிக முக்கியமாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X