search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கருக்கலைப்பு செய்ய நினைக்கும் பெண்களுக்கான அறிவுரை
    X

    கருக்கலைப்பு செய்ய நினைக்கும் பெண்களுக்கான அறிவுரை

    பெண்கள் கருவை கலைக்க நினைக்கும்போது, எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படுத்தாதவாறு சரியான முறையைக் கையாளவேண்டும்.
    பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளினால் ஆண்டுதோறும் சுமார் 85,000 பெண்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் என்று அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

    திருமணமாகி ஒரு குழந்தை பெற்றெடுத்த‍ பெண்கள், இரண்டாவது குழந்தைக்கு சிறிது இடைவெளி வேண்டும் என்று நினைத்து என்ன‍தான் கருத்தடை சாதனங்களை பயன்படுத்தினாலும், சிலநேரங்களில் எதிர்பாராத நேரத்தில் கருத்த‍ரித்து விடுகிறது.

    அப்ப‍டி கருத்தரிக்கும் போது, அக்கருவை கலைக்க முற்படுவார்கள். அப்படி கருவை கலைக்க நினைக்கும்போது, எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், எதிர்காலத்தில் கருத்தரிக்க நினைக்கும்போது எந்த ஒரு பிரச்சனையையும் ஏற்படுத்தாதவாறு சரியானமுறையைக் கையாளவேண்டும். இல்லா விட்டால், அது விபரீதமாகிவிடும். ஆகவே கருக்கலைப்பு செய்ய நினைப்போருக்கு சில இயற்கைப் பொருட்களைக் கொடுத்துள்ளது. வைட்டமின் சி நிறைந்த உணவுப்பொருட்கள் கருக்கலைப்பை ஏற்படுத்தும். இப்போது கருக்கலைப்பிற்கு உதவும் வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்கள் எவையென்று பார்ப்போம்.

    குறிப்பு: வைட்டமின் சி எடுத்துக்கொள்ளும் போது, தினமும் 6,000 மி.கி அளவுக்கு மேல் எடுக்கக்கூடாது.

    வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள உணவுப் பொருட்களில் ஒன்று தான் பட்டை. இந்த பட்டை கூட கருச்சிதைவை ஏற்படுத்தும். ஆகவே கரு வேண்டாம் என்பவர்கள், உணவில் பட்டையை அதிகம் சேர்த்து வரலாம்.

    கர்ப்பிணிகள் அன்னாசிப் பழத்தை சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அன்னாசிப் பழத்தை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்பதாலேயே தான்.



    பப்பாளியில் வைட்டமின் சி வளமாக நிறைந்திருப்பதால், இதனை சாப்பிட்டால் கரு கலைந்துவிடும். அதிலும் இதன் விதையை சாப்பிட்டால், நான்கே வாரங்களில் கரு கலைந்துவிடும்.

    கரும்பில் வைட்டமின் சி மட்டுமின்றி, உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. எனவே இதனை உட்கொண்டால், கருப்பையானது சுருங்கி, கருவானது கலைந்துவிடும்.

    வேர்க்கடலை சாப்பிட்டால், கரு கலையும் என்பதை பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இதனை தினமும் ஒரு கையளவு பச்சை வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால், கரு கலைந்துவிடும்.

    எள்ளானது கருப்பையை சுருக்கும் தன்மை கொண்டவை. அதனால் தான் கர்ப்பிணிகளை எள் சாப்பிட வேண்டாம் என்று சொல்வார்கள்.

    சிலபெண்களுக்கு வலுவான கருவாக கருத்தரித்திருந்து, மேற்கூறிய முறைகள் பயன்தரவில்லை என்றால், அவர்கள் முறையாக மருத்துவரை அணுக வேண்டியதுதான்.

    Next Story
    ×