என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குறைப்பிரசவம் ஆன பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்
Byமாலை மலர்9 Jan 2018 5:01 AM GMT (Updated: 9 Jan 2018 5:01 AM GMT)
குறைமாதத்தில் குறைப்பிரசவம் ஆன பெண்கள் மறுபடியும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? இந்த பிரச்சனைக்கான தீர்வு என்ன? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் 100- ல் 23 பெண்கள் கர்ப்பகாலத்தில் 20லிருந்து 33 வாரத்திற்குள் குறைப்பிரசவமாகி அதனால் கருயிழப்பு ஏற்படுகிறது. இதை பிரிடெர்ம் லேபர் என்பார்கள். இந்த குறைப்பிரசவத்தால் பாதிக்கக்கூடிய பெண்கள் இயல்பாக 22 லிருந்து 25 சதவீதம் பெண்களுக்கு குறைப்பிரசவம் ஆகிறது.
குறைப்பிரசவமான பெண்களுக்கு அடுத்து குழந்தைப்பேறு பகல் கனவாகவும் ஒரு பெரிய பயமாகவும் அமைகிறது. ஒரு பெண்ணுக்கு கர்ப்பம் தரித்து நன்றாக வளரும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளோடு இருந்த பெண்ணுக்கு கர்ப்பகாலத்தில் குறைப்பிரசவம் ஆகி குழந்தையிழப்பு அது முதல் மூன்று மாதத்திலும் இருக்கலாம்.
5 லிருந்து 6 மாதத்திலும் இருக்கலாம். சில பெண்களுக்கு ஆறு மாதத்தின் முடிவில் கூட இருக்கலாம். குறைப்பிரசவம் என்பது குழந்தை பிறந்து தாய்வயிற்றில் இல்லாமல் இன்குபெட்டர்லையோ தீவிர கண்காணிப்பிலிலோ வளரக்கூடிய நிலை வரும் வரைக்கும் பிரசவமாகி அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளால் குழந்தை வளர்ப்பு பாதிக்கக்கூடிய நிலை தான் குறைப்பிரசவம் என்பார்கள்.
இந்த குறைப்பிரசவம் 16-23 வரம் வரைக்கும் ஆகலாம். இந்த குறைப்பிரசவம் ஆவதால் பெண்ணுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. குறிப்பாக தன் தவறால் தான் குறைப்பிரசவம் ஆனது என பல பெண்கள் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் இந்த குறை பிரசவம் ஆவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு தமபதியர்கள் 16-33 வாரம் வரைக்கும் பிரசவ வலி ஏற்பட்டு அதனை சரிசெய்ய மருந்து மாத்திரைகள் கொடுத்ததும் அந்த பிரசவ வலி நிற்காதபட்சத்தில் கரு கருப்பையை நோக்கி நகர்ந்து வெளியே வந்து விடுவது தன குறைப்பிரசவம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X