search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் கால்சியம் குறைபாடு காரணமாக எலும்பு தேய்மானம் ஆவதால் மூட்டு வலி உண்டாகலாம்.
    இன்றைக்கு 40 வயதைத் தாண்டியவர்கள் பலரையும் பாடாகப்படுத்தும் பிரச்சனை, முழங்கால் மூட்டுவலி. சிலருக்கு இது பெரிய பாதிப்பை உண்டாக்கி, மூட்டு மாற்று அறுவைசிகிச்சை வரை கொண்டுபோய் விடுவதும் உண்டு. மூட்டுகளுக்கு வலுசேர்க்கும் உணவுகளை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்வது என இவற்றை ஆரோக்கியமாக வைத்திருந்தால், இந்த வலியைத் தவிர்த்துவிடலாம். மூட்டுகள் உறுதிக்கு உதவும் 10 உணவுகள் இங்கே...

    மனித எலும்புகளின் கட்டமைப்பில் எலும்புதான் உடலுக்கு வடிவமும் பலமும் அளிக்கிறது. பிறக்கும்போது 300 எலும்புகளாக இருக்கும் இவை, வயது கூடக் கூட 206-ஆகக் குறைகின்றன.

    பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் கால்சியம் குறைபாடு காரணமாக எலும்பு தேய்மானம் ஆவதால் மூட்டு வலி உண்டாகலாம்.

    உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு மூட்டுகளில் ஏற்படும் அதிக அழுத்தம் காரணமாக மூட்டு வலி ஏற்படலாம்.

    அதிகம் நேரம் உட்கார்ந்து வேலை செய்வது அல்லது அதிக நேரம் உட்கார்ந்து இருப்பது.

    உடலுழைப்பு இல்லாதது மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது .

    உணவில் அதிகமாக புளிப்பு சுவையை சேர்ப்பது.

    மூட்டு வலி நீங்க வீட்டு வைத்தியம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன...

    ஆப்பிள் சைடர் வினிகர்

    ஆப்பிள் சைடர் வினிகரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன, அவை மூட்டு  வலியிலிருந்து நிவாரணம் பெற உதவும். ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து காலையில் குடிக்கலாம்.

    இஞ்சி சாறு

    இஞ்சியில்  ஜின்ஜெரோல் எனப்படும் ஒரு கலவை நிரம்பியுள்ளது, இது இயற்கையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டது. முழங்கால் வலியிலிருந்து நிவாரணம் பெற நீங்கள் இஞ்சி தேநீர் தயாரித்து தினமும் இரண்டு முறை குடிக்கலாம்.

    இஞ்சி தேனீர்: ஒரு சிறிய இஞ்சி துண்டை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் சம அளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.

    எப்சம் உப்பு

    எப்சம் உப்பில் மெக்னீசியம் சல்பேட் உள்ளது, இவை ஒரு வலி நிவாரணி ஆகும். இது வீக்கத்தைக் குறைத்து வலியைக் குறைக்கிறது. ஒரு பக்கெட் குளியல்  நீரில் ஒரு ஸ்பூன் எப்சம் உப்பை வைத்து அதில் கால்களை 15-20 நிமிடங்கள் ஊற வைக்கலாம்.

    கற்பூரம் எண்ணெய்

    கற்பூரம் பொடி கலந்த எண்ணெய் மூட்டு வலியை குறைக்கிறது. மூட்டுகளில் ஏற்படும் சிரமத்தை நீக்குகிறது, கற்பூர எண்ணெயைத் தயாரிக்க ஒரு கப் சூடான (இதமான சூட்டில்) தேங்காய் எண்ணெயில் ஒரு டீஸ்பூன் கற்பூரப் பொடியைச் சேர்க்கவும். வலி உள்ள இடத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை இதை மசாஜ் செய்யவும்.

    மஞ்சள்

    மஞ்சள்: ஒரு சக்திவாய்ந்த ஆண்டிசெப்டிக் கலவை என்று அறியப்படும் மஞ்சள் குர்குமின் கொண்டிருப்பதால் வலியைக் குறைக்க உதவுகிறது. ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து பாதிக்கப்பட்ட முழங்காலில் தினமும் இரண்டு முறை தடவவும்.

    ஐஸ் கட்டி

    ஐஸ் கட்டிகளைப் ஒரு துணியில் சுற்றி முழங்காலில் வலி உள்ள இடத்தில் ஒரு பத்து  நிமிடங்கள் ஒத்திடம் கொடுக்கலாம், இவ்வாறு செய்வது வலியைக் குறைப்பது மட்டுமல்லாமல், முழங்கால்களில் வீக்கத்தையும் குறைக்கிறது.

    மேலே கொடுக்கப்பட்டுள்ள எந்த முறைகளை பயன்படுத்துவதாக இருந்தாலும் உங்கள் குடும்ப மறுத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
    பி.சி.ஓ.எஸை முற்றிலும் குணப்படுத்த எந்த சிகிச்சைகளும் இல்லாத நிலையில் முறையான வாழ்க்கை முறையே கை கொடுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
    பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் நிகழக்கூடிய மாதவிடாய் சீராக இல்லாமல் தடைபடுவதும் அல்லது வழக்கத்திற்கு மாறாக அதிக ரத்தப்போக்கை உண்டாக்குவதுதான் பி.சி.ஓ.எஸ். கருப்பையில் உருவாகும் நீர்க்கட்டிகள்தான் இதற்கு முக்கிய காரணம். இந்த நீர்க்கட்டிகள் முழுமையாக உடைந்தால்தான் மாதவிடாய் சீராக இருக்கும்.

    பி.சி.ஓ.எஸை முற்றிலும் குணப்படுத்த எந்த சிகிச்சைகளும் இல்லாத நிலையில் முறையான வாழ்க்கை முறையே கை கொடுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக அதிக எடை பிரதான காரணமாக இருக்கிறது. மேலும் முகம் மற்றும் உடலில் அதிகப்படியான முடி வளர்ச்சி, முகப்பரு மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

    பாலிசிஸ்டிக் ஓவரி நோய் (பி.சி.ஓ.எஸ்) பொதுவாக பெண்களின் இனப்பெருக்க வயதில் நிகழ்கிறது. இந்த பிரச்னை உள்ள பெண்களின் கருப்பையின் இரு பக்கங்களிலும் உள்ள சினைப்பைகளில் சிறிய நீர்க்கட்டிகளின் வளர்ச்சி இருக்கும். இதன் விளைவாக கருமுட்டைகள் உருவாக முடியாத நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது.

    பி.சி.ஓ.எஸ் பெரும்பாலும் வாழ்க்கை முறை தொடர்பான நோயாக வகைப்படுத்தப்படுகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள், உடற்பயிற்சியின்மை, மோசமான வாழ்க்கை முறை, புகைபிடித்தல், மன அழுத்தம் மற்றும் போதிய தூக்கமின்மை போன்ற பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதை சரி செய்ய எப்படியான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும்..?

    ஆரம்ப கட்ட அறிகுறிகள்

    *ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, தாமதமான சுழற்சிகள், மிகக் குறைந்த கால மாதவிடாய் போன்றவை நீர்க்கட்டி பிரச்னையின் முக்கிய அறிகுறிகள்.

    *பெரியவர்களுக்கு மாதவிடாய் காலங்கள் 21 நாட்களுக்கு முன்னதாகவோ அல்லது 35 நாட்களுக்குப் பிறகோ ஏற்படும். அதுவே இளம் பெண்களுக்கு 45 நாட்களுக்கு பிறகு மாதவிடாய் நிகழ்ந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

    *உடல் பருமன் மற்றொரு எச்சரிக்கை அறிகுறியாகும். ஏனெனில் பி.சி.ஓ.எஸ் பாதித்த பெண்களில் கிட்டத்தட்ட 40-80 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்களாக இருப்பார்கள்.

    *ஆண்களின் உடலில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் அதிக அளவில் இருப்பதால் உடலில் முகப்பரு, அதிகப்படியான முடி வளர்வது, குறிப்பாக முகத்தில் ஒரு முக்கிய அறிகுறி.

    *உச்சந்தலையில் முடி உதிர்தல் மற்றும் வழுக்கை ஏற்படுத்துவது.

    *டைப் 2 நீரிழிவு நோயின் பாதிப்பு. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சாதாரண அளவை விட அதிகரிக்கும்.

    *உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அதிகரிப்பது.

    *மனநிலை மாற்றங்கள், மனச்சோர்வு, தன்னம்பிக்கை இல்லாமை மற்றும் பதட்டம் போன்றவை பி.சி.ஓ.எஸ்-ன் அறிகுறிகளாகும்.
    மருத்துவ ரீதியாக கண்டறியும் முறை பி.சி.ஓ.எஸ் நோயைக் கண்டறிய திட்டவட்டமான சோதனை எதுவும் இல்லை. எனினும் மருத்துவர்கள் பி.சி.ஓ.எஸ் நோயறிதலுக்கு ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனைகளான ரத்த பரிசோதனைகள் மற்றும் அல்ட்ராசவுண்ட் சோதனை செய்வதன் மூலம் கண்டறியலாம்.
    வெளியில் இருந்து பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கும் தம்பதியர் படுக்கையறையில் சந்தோஷமாக இருப்பதில்லை. இதற்கு அவர்கள் படுக்கையறையில் செய்யும் தவறுகளே ஆகும்.
    திருமணத்தின் போது இளம் தம்பதியர் இடையே இருக்கும் அன்யோன்யம் நாட்கள் செல்ல செல்ல குறைந்துவிடுகிறது. வெளியில் இருந்து பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கும் தம்பதியர் படுக்கையறையில் சந்தோஷமாக இருப்பதில்லை. இதற்க்கு அவர்கள் படுக்கையறையில் செய்யும் தவறுகளே ஆகும். அந்த தவறுகள் என்னென்ன என்பதை பின்வருமாறு பார்ப்போம்.

    1. கணவன், மனைவிக்கு இடையில் இருக்கும் அன்பு, நெருக்கம் எப்போதும் குறையாமல் இருக்க வேண்டுமென்றால் உங்களின் படுக்கையறையில் உங்கள் முன்னோர்களின் படங்கள் மற்றும் கடவுள் படங்களையோ உங்கள் படுக்கையறையில் இருப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இவை தம்பதியர் இடையே ஏற்படும் காதல் உணர்வுகளை முடக்கி விடும்.

    2. தம்பதிகள் அவர்களின் படுக்கையை அறையின் நடுவில் போடுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இது ஒரு தவறான பழக்கமாகும். படுக்கையானது இரண்டு சுவற்றின் மூலையில் மீது படும்படி மட்டுமே அமைக்க வேண்டும்.

    3. படுக்கையறையில் கண்ணாடி இருப்பதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை தவிர்க்கமுடியாத காரணங்களால் கண்ணாடி இருந்தாலும் தம்பதிகளின் உருவமானது தூங்கும்போது கண்ணாடியில் விழாத வண்ணம் இருக்க வேண்டும்.

    4. படுக்கையில் தம்பதியர் தூங்கும் தலைப்பகுதியானது எப்பொழுதும் அறையின் தெற்கு திசை பார்த்துதான் இருக்க வேண்டும். இது உங்கள் இணையின் மீதான ஆசையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல தூக்கத்தையும் வழங்குகிறது. வடக்கு அல்லது கிழக்கு பக்கமாக தலைவைத்து தூங்கினால் தம்பதிகளுக்கு இடையே ஒருவர் மீது ஒருவருக்கு எரிச்சலை ஏற்படுத்துவத்துவதுடன் தேவையில்லாத பிரச்சினைகளையும் உருவாக்கும்.

    5. வாஸ்து சாஸ்திரத்தின் படி டிரஸ்ஸிங் டேபிள் ஆனது எப்பொழுதும் படுக்கையறைக்குள் இருக்கக்கூடாது. ஏனெனில் இது உங்கள் அறைக்குள் தொடர்ந்து எதிர்மறை சக்திகளை உண்டாக்கும். இது தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும்.

    6. தம்பதிகளின் படுக்கை அறையின் நிறமானது வெள்ளை நிறத்தில் இருக்க கூடாது. வெள்ளைக்கு பதில் சிவப்பு, ஆரஞ்சு போன்ற வண்ணங்களில் பெயிண்ட் அடிப்பது கணவன், மனைவிக்குள் நெருக்கம் ஏற்பட வழிவகுக்கும். ஏனெனில் நிறத்திற்கும் மனித மனதிற்கும் நிறைய தொடர்புள்ளது.

    7. நம்முடைய சாஸ்திரங்களின் படி தம்பதிகள் படுக்கும் கட்டில் உலோகத்தால் செய்யப்பட்டதாக இருக்கக்கூடாது. மரக்கட்டிலை தவிர மற்ற உலோகக் கட்டில்களும் தம்பதிகளுக்குள் சண்டையை ஏற்படுத்த காரணமாகிவிடும்

    8. படுக்கையறையில் செல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். படுக்கையறை என்பது அன்பை பரிமாறிகொள்ளும் இடம் மட்டும் தான். அந்த குறுகிய நேரத்திலும் தம்பதிகள் செல்போனை பயன்படுத்தினால் அவர்களின் மனதில் இருக்கும் அன்பானது வெளியே தெரியாமலே போய் விடும்

    9. உங்கள் அறையை அலங்கரிக்க தேவையில்லாத பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க் வேண்டும். அழகாக இருக்கிறதே என்பதற்காக தேவையில்லாத பொருட்களை வைக்க கூடாது. இது தேவையில்லாத இடைஞ்சல்களை ஏற்படுத்துவதுடன் உங்களிடையே  இருக்கும் நெருக்கத்தையும் குறைத்து விடும். இதனால் தம்பதிகள் இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்படும்.

    10. படுக்கையறையில் தொலைக்காட்சி இருப்பதை தவிர்க்க வேண்டும்.

    இவற்றை கடைபிடித்தால் தம்பதிகள் இடையே இருக்கும் அன்னோன்யமானது என்றும் குறையாமல் என்றென்றும் நீடித்து இருக்கும்.
    நாப்கின்கள் வைத்திருக்கும் போது, இறுக்கமான உடைகள் அணிவதால் தொடை இடுக்குகளில் தடிப்பை உண்டாக்கி மேலும் அசவுகரியத்தை ஏற்படுத்தும்.
    கோடைகாலத்தில் வெப்பத்தின் காரணமாக, பெண்கள் சரும பாதிப்பு, வறட்சி, வியர்க்குரு போன்ற பிரச்சினைகளை சந்திப்பதோடு, உடலின் அந்தரங்கப் பகுதிகளில் அரிப்பு, எரிச்சல், அழற்சி போன்ற தொந்தரவுகளால் சிரமப்படுகிறார்கள். மாதவிடாய் நாட்களில் சானிட்டரி நாப்கின் பயன்படுத்தும்போது மேலும் அசவுகரியத்தை ஏற்படுத்தக்கூடும். இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்வது எப்படி என்பதை பார்ப்போம்.

    நாப்கினை தேர்வு செய்தல்

    பெரும்பாலான நாப்கின்கள் ஈரத்தை உறிஞ்சுவதற்காக, ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படுகின்றன. இது பெண்களுக்கு கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துவதோடு, தொடர்ந்து உபயோகித்தால் புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்தும்  உள்ளது. எனவே ரசாயனமற்ற நாப்கின்களை வாங்கி பயன்படுத்துவது நல்லது.

    நாப்கினை மாற்றுதல்:

    கோடைகாலத்தில் நாப்கின்களை 2 முதல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றுவது நல்லது. உதிரப்போக்கு அதிகமாக இருப்பவர்கள் இதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். நாப்கின்களை மாற்றும் போது கைகளைக் கழுவுதல் அவசியம். இது நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும்

    இரண்டு நாப்கின்கள் கூடாது:

    மாதவிடாயின் போது அதிகமான உதிரப்போக்கை உணரும் பெண்கள், அடிக்கடி நாப்கினை மாற்றுவதையும், ஆடைகளில் கறை படிவதையும் தவிர்ப்பதற்காக ஒரே நேரத்தில் இரண்டு நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். இது நோய் தொற்றுக்கு வழிவகுக்கும்.

    சுத்தமாக பராமரித்தல்:

    மாதவிடாய் காலத்தில் மட்டுமில்லாமல், அந்தரங்க உறுப்பை  எப்போதும் சுத்தமாய் வைத்திருத்தல் அவசியம். மாதவிடாய் நாட்களில் வெதுவெதுப்பான தண்ணீரைக் கொண்டும் சுத்தம் செய்யலாம். இதற்காக வேறு திரவத்தை பயன்படுத்தக்கூடாது.  மாதவிடாய் நாட்களில் இரண்டு முறை குளிப்பது, உடலை சுத்தமாக வைத்திருப்பதோடு, சுறுசுறுப்பையும் தரும்.

    உடைகளில் கவனம்:

    உடலோடு ஒட்டியிருக்கும் வகையிலான ஆடைகள் சிரமத்தை ஏற்படுத்தும். சருமத்தோடு ஒட்டாத, காற்றோட்டமான ஆடைகளை தேர்வு செய்து அணிய வேண்டும். நாப்கின்கள் வைத்திருக்கும் போது, இறுக்கமான உடைகள் அணிவதால் தொடை இடுக்குகளில் தடிப்பை உண்டாக்கி மேலும் அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

    நாப்கினை அகற்றுதல்:

    நாப்கின் பயன்படுத்துவது போலவே, அதை அகற்றுவதிலும் கவனம் தேவை. பயன்படுத்திய நாப்கின்களை முறையாக காகிதத்தில் சுற்றி குப்பைத் தொட்டியில் போடவேண்டும். குப்பைத் தொட்டியில் இருக்கும் நாப்கின்களையும் அவ்வப்போது அகற்றிவிட வேண்டும்.

    உடல் ஆரோக்கியம் மற்றும் நீரேற்றம்:

    கோடை காலத்தில் உடலில் நீரிழப்பு அதிகமாக ஏற்படுவதால் சோர்வு உண்டாகும். எனவே போதுமான அளவிற்கு தண்ணீர் குடிப்பதோடு, புத்துணர்வு தரும் பழச்சாறும் அருந்தலாம். ஒரு நாளில் குறைந்தது 9 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிறு வலியின் காரணமாக சிலர் சாப்பிடாமல் இருப்பார்கள். அதைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதோடு, எளிமையான உடற்பயிற்சிகள் செய்தால் உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கலாம்.
    பெண்கள் இரண்டு மார்பகத்திலும் மாற்றி மாற்றி பால் கொடுக்க வேண்டும். ஒரு பக்கம் மட்டும் தாய்ப்பால் கொடுத்தால் மார்பகத்தில் பால் கட்டிக் கொள்ளும். வலியும் ஏற்படும்.
    மார்பகத்தில் தாய்ப்பால் கட்டிக்கொள்வது இயல்பான விஷயம்தான். ஆனால், பலருக்கும் இதனால் வலி ஏற்படும். குழந்தைக்கு சரியாக பால் கொடுக்க முடியாமல் போகும். எனவே இதற்கான வலி இல்லாத வீட்டு வைத்திய முறைகளை தெரிந்து வைத்துக்கொண்டால் தாய்ப்பால் கட்டினாலும் அதை சரி செய்து விடலாம்.

    மார்பகத்தில் பால் கட்டி இருந்தால், லேசாக வீங்கி இருந்தாலும், விரல்களால் தடவி சரி செய்ய வேண்டும். கனமான மார்பகத்தை மென்மையாக அழுத்தி, கட்டிய பாலை வெளியேற்றி விட வேண்டும்.

    இரண்டு மார்பகத்திலும் மாற்றி மாற்றி பால் கொடுக்க வேண்டும். ஒரு பக்கம் மட்டும் தாய்ப்பால் கொடுத்தால் மார்பகத்தில் பால் கட்டிக் கொள்ளும். வலியும் ஏற்படும்.

    பால் கட்டாமல் இருக்க மல்லாந்து படுக்காமல், ஒரு பக்கமாக படுக்கவும். ஒரு பக்கமாக படுத்து உறங்கினால் எளிதில் பால் கட்டிக்கொள்ளாது.

    கிரீம், மருந்துகள் தடவ கூடாது. குழந்தை பால் குடிக்கும்போது, கெமிக்கல்கள் குழந்தையின் உடலில் சென்று விடும்.

    தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னும் பின்னும் உங்கள் கைகளால் மார்பகங்களை மசாஜ் செய்யுங்கள்.

    பெரிய முட்டைக்கோஸ் இலைகளை எடுத்து 2 நிமிடம் சுடுநீரில் போட்டு, அது சூடு ஆறிய பின் பிராவில் சொருகி வையுங்கள். தாய்ப்பால் கட்டுவது நிற்கும்.

    உருளைக்கிழங்கை இரண்டாக அறிந்து, ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். சில்லென்று ஆன பிறகு, உங்களுக்கு எந்த இடத்தில் தாய்ப்பால் கட்டி இருக்கிறதோ அங்கு உருளைக்கிழங்கை வைத்து மசாஜ் செய்யுங்கள்.

    மல்லிகைப்பூவை அரைத்து மார்பகத்தில் எங்கு தாய்ப்பால் கட்டி இருக்கிறதோ அங்கு திக்கான பேக்காக போடலாம். தாய்ப்பால் கட்டி இருப்பது சரியாகும். இதை அடிக்கடி போட்டால் தாய்ப்பால் சுரப்பு குறைந்துவிடும். எனவே, தேவையானபோது போடலாம்.

    ஐஸ் கட்டியை எடுத்து மார்பகத்தில் மிதமாகத் தேய்த்து ஒத்தடம் கொடுத்தால் தாய்ப்பால் கட்டி இருப்பது சரியாகும்.

    சூடான தண்ணீரில் டர்க்கி டவலை நனைத்து, பிழியவும். இளஞ்சூடாக மார்பகங்களில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். அவலை சூடான தண்ணீரில் நனைத்து மார்பகத்தில் கட்டி விட்டாலும் தாய்ப்பால் கட்டி கொள்வது சரியாகும்.

    அக்குபஞ்சர் நிபுணரிடம் சென்று நீடில் போட்டுக் கொள்ளலாம். தாய்ப்பால் கட்டிக் கொள்வது சரியாகிவிடும். உள்ளங்கையில், கட்டைவிரலுக்கு கீழே உள்ள பகுதியில் 10 நிமிடங்களுக்கு மிதமாக அழுத்தம் கொடுத்து வந்தாலும் தாய்ப்பால் கட்டுவது சரியாகிவிடும்.

    அரிசியை துணியில் முடித்து, தோசை தவாவில் வைத்து சூடேற்றவும். இளஞ்சூடாக மார்பகத்தில் வைத்து மசாஜ் செய்த பிறகு, தாய்ப்பாலை குழந்தைக்கு தரலாம். இதனால் தாய்ப்பால் கட்டி இருப்பதும் சரியாகும். குழந்தைக்கு தேவையான பாலும் சீராக கிடைக்கும்.

    குழந்தையின் 1 ½ - 2 வயது வரை தாய்ப்பால் தொடர்ந்து கொடுத்தாலே தாய்ப்பால் கட்டிக்கொள்ளாது.
    கணவர் என்பவர் தனது மனைவியை தனக்கு சொந்தமானவர் என்று பார்க்கிறார். கணவர் என்பவர் மனைவிகளை அடக்கி ஆள்பவர்களாக பழங்கால மரபுகளும், கலாச்சாரமும் பார்க்கிறது
    கர்நாடகாவில் பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண் தனது கணவர் மீது பெங்களூரு போலீசாரிடம் ஒரு பரபரப்பு புகாரை அளித்தார். அந்த புகாரில் திருமணம் ஆன நாள் முதல் தனது கணவர் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், நான் கர்ப்பமாக இருந்த போது என்னுடன் உடலுறவு கொண்டதால் கருக்கலைந்தது என்றும், எனது மகளின் முன்பு உடலுறவு கொள்ள என்னை வற்புறுத்துகிறார் என்றும் கூறி இருந்தார்.

    இந்த புகாரின்பேரில் பெண்ணின் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய போலீசாருக்கு உத்தரவிட கோரி அந்த பெண்ணின் கணவர் கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    நீதிபதி நாகபிரசன்னா கூறுகையில், அரசியலமைப்பின் கீழ் அனைத்து மனிதர்களையும் சமமாக கருத வேண்டும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, மற்ற பாலினத்தவர்களாக இருந்தாலும் சரி. மனைவியின் விருப்பம் இல்லாமல் அவரை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டாலும் அது கற்பழிப்பு தான்.

    இவ்வாறு செய்வதன் மூலம் அந்த பெண்ணின் மனமும், உடலும் கடுமையாக பாதிக்கப்படும். பெண்ணிடம் கட்டாயப்படுத்தி கணவர் உடலுறவு கொள்வதை ஏற்க முடியாது. ஒரு ஆண், ஆண் தான். ஒரு செயல் செயல்தான், பலாத்காரம் அது பலாத்காரம் தான். திருமணம் செய்து கொண்டோம் என்பதற்காக கணவருக்கு சிறப்பு சலுகைகள் தர முடியாது. கணவர் என்பவர் தனது மனைவியை தனக்கு சொந்தமானவர் என்று பார்க்கிறார். கணவர் என்பவர் மனைவிகளை அடக்கி ஆள்பவர்களாக பழங்கால மரபுகளும், கலாச்சாரமும் பார்க்கிறது என நீதிபதி கூறினார்.

    தொடர்ந்து, அந்த கணவருக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகாரை தள்ளுபடி செய்யவும் கர்நாடக ஐகோர்ட்டு மறுத்து விட்டது.

    இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 375ல் உள்ள விதிவிலக்கின் கீழ், தற்போதுள்ள இந்திய சட்டத்தின்படி, மனைவி 15 வயதுக்கு உட்பட்டவராக இல்லாதபோது, தனது சொந்த மனைவியுடன் மேற்கொள்ளும் தாம்பத்ய உறவு பாலியல் வன்கொடுமை ஆகாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், இதற்கு எதிராக என்.ஜி.ஓ.க்கள் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மகளிர் கூட்டமைப்பு சார்பில் பல மனுக்கள் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

    இந்த விவகாரத்தில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை விளக்கும்படி மத்திய அரசிடம் டெல்லி ஐகோர்ட்டு கேட்டு கொண்டுள்ளது.  ஆனால், இந்த விவகாரத்தில் நிலைப்பாட்டை தெளிவாக்க அரசு காலஅவகாசம் கேட்டுள்ளது.

    உயரதிகாரிகள் அல்லது உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளாமல் பதிலளிப்பது ஒரு பிரிவினருக்கு அல்லது மற்றொருவருக்கு அநீதி வழங்கியது போல் ஆகிவிடும் என தெரிவித்து உள்ளது.

    இந்தியாவில், இதுபோன்ற விவாதங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க தேசிய குடும்ப சுகாதார அமைப்பு சர்வே (ஆய்வு) ஒன்று எடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.  இந்த ஆய்வில் 15 முதல் 49 வயதுக்கு உட்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

    அதில், பெருமளவிலான ஆண்கள் கூறும்போது, ஒரு பெண் தாம்பத்யம் வேண்டாம் என அவரது கணவரிடம் மறுக்கிறார் என்றால் அதற்கு அன்றைய தினம் அவருக்கு அதிகப்படியான களைப்பு ஏற்பட்டிருக்கும் என தங்களுடைய நம்பிக்கையை தெரிவித்தனர்.

    இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 80 சதவீத பெண்கள் 3 அல்லது அவற்றுள் ஏதேனும் ஒரு காரணத்தினால் தாம்பத்தியத்திற்கு மனைவி மறுப்பு தெரிவிக்க கூடும் என கூறுகின்றனர்.

    அந்த 3 விசயங்கள், கணவருக்கு ஒரு வேளை பாலியல் நோய் இருக்கலாம்.  மற்ற பெண்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கலாம்.  அல்லது அந்த பெண் களைப்புடனோ அல்லது தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கான மனநிலை இல்லாதவராகவோ இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனை 66 சதவீத ஆண்களும் ஏற்று கொண்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்க விசயம்.  எனினும், 8 சதவீத பெண்கள் மற்றும் 10 சதவீத ஆண்கள் இந்த 3 காரணங்களால் மனைவி தாம்பத்தியத்திற்கு மறுக்கிறார் என்பதனை ஒத்து கொள்ளவில்லை.

    கடந்த 2019 முதல் 2021 வரையிலான காலகட்டத்தினை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்கு முன் எடுக்கப்பட்ட 2015 முதல் 2016 வரையிலான காலகட்ட ஆய்வுடன், இந்த ஆய்வை ஒப்பிடும்போது, மேற்கூறிய 3 காரணங்களால் மனைவி தாம்பத்தியத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார் என்பதற்கான அளவீடு பெண்களிடம் 12 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.  எனினும், பழைய ஆய்வுடன் ஒப்பிடும்போது, 3 சதவீத ஆண்களே இந்த அளவீட்டில் அதிகரித்து உள்ளனர்.

    இந்த ஆய்வில் மற்றொரு தகவலாக, வெவ்வேறு சூழ்நிலைகளில் தனது மனைவியை கணவர் அடிப்பதற்கு நியாயம் உள்ளது என 44 சதவீத ஆண்களும், 45 சதவீத பெண்களும் நம்புகின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருமணத்திற்கு பின்னர் கணவரால் பாலியல் வன்கொடுமை என்ற சர்ச்சையான விவகாரத்திற்கு உரிய தீர்வு எட்டப்படுவதற்கு முன்பு இதுபோன்ற சர்வே முடிவு வெளிவந்துள்ளது.
    தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மார்பகப் புற்றுநோய் குறித்த பரிசோதனைகள் இப்போது இலவசமாக செய்யப்படுகின்றன.
    பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பதும் மார்பகப் புற்றுநோய்தான். கருப்பைப் புற்றுநோயைவிட அதிகம் பாதிக்கின்ற நோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது.

    பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பதும் மார்பகப் புற்றுநோய்தான். கருப்பைப் புற்றுநோயைவிட அதிகம் பாதிக்கின்ற நோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஒன்றரை லட்சம் பேர் மார்பகப் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்படுகிறார்கள்.  

    இந்தியப்  பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் இந்த மார்பகப் புற்றுநோய்தான். காரணம் சரியான விழிப்புணர்வின்மை மற்றும் ஆரம்பத்திலேயே கண்டறியாமை. மருத்துவமனைக்கு வருபவர்களில் 60 சதவிகிதத்தினர் நோய் முற்றிய நிலையில் வருகின்றனர்.

    * மார்பகத்தில் கட்டி அல்லது அக்குளில் வீக்கம்
    * மார்பக அமைப்பில் மாற்றம்
    * மார்பகக் காம்பில் திரவம் கசிதல்
    * மார்புக் காம்புகள் உள்ளிழுத்துக் கொள்ளல்
    * மார்பகத் தோலில் சுருக்கம் அல்லது புள்ளிகள் தோன்றுவது
    * மார்பகம் சிவத்தல், வீங்குதல், கதகதப்படைதல்.

    தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மார்பகப் புற்றுநோய் குறித்த பரிசோதனைகள் இப்போது இலவசமாக செய்யப்படுகின்றன. மரபணு அமைப்பில் ஏற்படும் சில பிறழ்வுகளால், சில செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் வளரும். இவை பல்கிப் பெருகுவதுதான் கட்டியாக  மாறுகிறது.  

    சில வகைக் கட்டிகள் வளராமல் அப்படியே இருக்கும். இதனால் ஆபத்து இல்லை. ஒரு சிலருக்கு இது வளர்ந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் இதை அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டியும் வரலாம்.  

    சில கட்டிகள் வளர்ந்து பெரிதாவதோடு, பக்கத்தில் உள்ள பாகங்களுக்கும் பரவும். இதனையே புற்றுநோய் பரவுதல் என்கின்றனர். இது சுற்றியுள்ள திசுக்களையும் தாக்கும். இந்தத் திசுக்களை எடுத்து பயாப்சி செய்து பார்ப்பதன் மூலமே பரவும் கட்டியா அல்லது ஆபத்து இல்லாத வெறும் கட்டியா எனத் தெரிய வரும். இதில் ஸ்டேஜ் 0 என்றால் கட்டி வளர்ந்த இடத்திலேயே இருக்கிறது எனப் பொருள்.

    ஸ்டேஜ் 4 என்றால், உடலின் பல பகுதிகளுக்கும் பரவி விட்டது எனப் பொருள்.மேலும் புற்று நோய் என்பது தொற்று நோயும் அல்ல. நோயாளியைத் தொடுவதாலோ அவருடன் உறவு கொள்வதாலே, உணவைப் பகிர்ந்து கொள்வதாலோ, காற்றிலோ புற்றுநோய் அணுக்கள் பரவாது. மேலும் பாதிக்கப்படும் அனைவருக்குமே அது வெளியே தெரியும் கட்டியாகவும் இருப்பதில்லை.  

    உடலின் உள்ளே எந்த உறுப்பிலும் கட்டி உருவாகலாம். துவக்க நிலையில் கண்டுபிடித்தால் அதை குணப்படுத்த முடியும். நோயின் நிலை, கட்டி எவ்வளவு பெரிதாக இருக்கிறது. பரவக் கூடியதா, பரவாத நிலையா என்பதைப் பொறுத்து, அறுவை சிகிச்சை, மருந்து சிகிச்சை கதிரியக்க சிகிச்சை ஆகிய மூன்றும் தனித்தனியாகவோ சேர்த்தோ மேற்கொள்ளப்படுகிறது.

    தொடர் மருந்து மாத்திரை, முறையான உணவுப் பழக்கவழக்கத்துடன், தேவை தைரியமும் தன்னம்பிக்கையும். மார்பகப் புற்றுநோயுக்கும் இது அத்தனையும் பொருந்தும்.
    சித்த மற்றும் ஆங்கில முறை இணைந்த நவீன மருத்துவம் மூலம் புற்று நோயை முற்றிலும் குணப்படுத்துவதுடன் திரும்பவும் வராமல் செய்து விடலாம்.
    இன்றைய உலகில் பெண்களை அச்சுறுத்தும் வகையில் மார்பக புற்றுநோய் உருவாகிக் கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்பக புற்றுநோயால் லட்சக்கணக்கில் மரணம் ஏற்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் பெண்களுக்கு அதிக அளவில் இந்த நோய் ஏற்படுகிறது. புற்றுநோயை குணப்படுத்தும் அரிய மருத்துவ முறைகள் தற்போது வந்து விட்டன. சித்த மற்றும் ஆங்கில முறை இணைந்த நவீன மருத்துவம் மூலம் புற்று நோயை முற்றிலும் குணப்படுத்துவதுடன் திரும்பவும் வராமல் செய்து விடலாம்.

    துவக்க நிலை மார்பக புற்றுநோய் சாதாரணமாக வலியை உண்டாக்காது. மார்பக புற்றுநோய் வளரத் தொடங்கும் போது எந்தவித அடையாளமும் இருக்காது.

    * 20 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள், ஒவ்வொரு மாதமும் ஒரு நாளைத் தேர்வு செய்து கொண்டு, தங்களது மார்பகங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

    * 40 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள், மருத்துவமனைக்குச் சென்று, அனுபவம் வாய்ந்த மருத்துவரிடம் ஆண்டுக்கு ஒரு முறை தங்களது மார்பகங்களை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்;

    * குடும்பத்தில் யாருக்காவது ஏற்கெனவே மார்பகப் புற்று நோய்  பாதிப்பு இருந்திருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் 30 வயதுக்குப் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் "மமோகிராம்' (சிறப்பு எக்ஸ் ரே) பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

    * குடும்பத்தின் நெருங்கிய உறவினர் யாருக்காவது ஏற்கெனவே மார்பகப் புற்று நோய் அல்லது சினைப் பை புற்று நோய் இருந்திருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் 30 வயதுக்கு மேல் மார்பக எம்ஆர்ஐ பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
    இயல்பாகவே மாத விலக்குக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு பல்வேறு அவஸ்தைகள் ஏற்படுவதுண்டு.
    மாதந்தோறும் மாதவிலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு மன, உடல் அவஸ்தைகள் ஏற்படும். அதனை 'பி.எம்.எஸ்' (ப்ரீ மென்ஸ்ட்டுரல் சிண்ட்ரோம்) என்பார்கள். உடல் வீக்கம், மார்புகள் கனமாகி வலித்தல், தூக்கமின்மை, கோபம், எரிச்சல் போன்றவை பி.எம்.எஸ். அறிகுறிகளாகும்.

    இந்த 'பி.எம்.எஸ்.' பிரச்சினைகள் பற்றி தொடர்ந்து ஆய்வுகள் செய்து வந்த மருத்துவ விஞ்ஞானிகள், அதில் அதிகபட்ச பாதிப்பு ஏற்படுவதற்கு 'பி.எம்.டி.டி' (ப்ரீ மென்ஸ்ட்டுரல் டிஸ்மோர்பிக் டிசார்டர்) என்று பெயரிட்டிருக்கிறார்கள். இது கொஞ்சம் ஆபத்தும் கலந்தது. இந்த பாதிப்பு ஏற்படும் பெண்கள், வெளிநாடுகளில் கணவரை அடித்து உதைத்து விடுகிறார்கள். இங்குள்ள பெண்கள் கணவரோடு அதிகபட்ச வாக்குவாதத்தில் ஈடுபடுவது, குழந்தைகளுக்கு சூடு போடுவது, பக்கத்து வீட்டினரோடு சண்டை போடுவது போன்றவைகளில் ஈடுபடலாம்.

    இதன் தொடர்ச்சியான பாதிப்புகள் சமூகத்திலும் எதிரொலிக்கும். இதில் அதிகபட்ச கொடூரம் என்னவென்றால், இந்த பி.எம்.டி.டி. பாதிப்பின் காலகட்டத்தில் தான் பெண்கள் தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்கிறார்கள், வன்முறை செயல்களிலும் ஈடுபடுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இயல்பாகவே மாத விலக்குக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு பல்வேறு அவஸ்தைகள் ஏற்படுவதுண்டு. கூடுதலாக மனஅழுத்தம், கூச்சல் போட்டு கத்தும் மனநிலை, அடுத்து என்ன செய்வது என்ற எண்ணமே இல்லாமல் இருப்பது, பொது நிகழ்ச்சிகளில் பங்கு பெறத் தயங்கி வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடத்தல், அதிகமான சோர்வு போன்றவைகளும் இருந்தால் அவை பி.எம்.டி.டி. பாதிப்பிற்கு கொண்டு சென்று விடுகிறது. அப்போது கணவரோடு தாம்பத்ய வாழ்க்கையில் ஆர்வமின்மையும், எரிச்சலும் ஏற்படலாம்.

    வேலை பார்க்கும் இடங்களில் கவனமின்மை வெளிப்படையாகத் தெரியும். குழந்தைகளிடம் அலட்சியம் தோன்றும். மாணவிகளாக இருந்தால் படிப்பில் பின்தங்குவார்கள். தனிமையை நாடுதல், தற்கொலையைப் பற்றி சிந்தித்தல் போன்றவை ஏற்படலாம். மாதவிலக்கு காலத்தில் இதுபோன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. இந்த அறிகுறிகள் மாதவிலக்கு முடிந்த 14-ம் நாளில் தொடங்கி, அடுத்த மாதவிலக்குக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு மிகவும் அதிகரித்து, மாதவிலக்கு முடிந்த பிறகு ஐந்து நாட்கள் வரை நீடிக்கும்.

    * கோபம் தொடர்ந்து நீடித்தல்.
    * வேலையிலும், மற்றவர்களோடு பழகுவதிலும் கவனம் செலுத்தாமல் இருப்பது.
    * சின்னச் சின்ன விஷயங்களையும் பெரிய அளவில் விவாதங்களாக்கி விடுதல்.
    * காரணமில்லாமல் அழுதல்.
    * தன்னால் எதுவுமே முடியாது என்று தன்னம்பிக்கை குறைதல்.
    * மற்றவர்களை தன்பக்கம் ஈர்க்கத் தெரியாமல் தடுமாறுதல்.
    * கடுமையான சோர்வு.
    * உறக்கம் இல்லாமல் போதல் அல்லது மிகவும் அதிகரித்தல்.
    * பசியில்லாமல் போதல் அல்லது மிகவும் அதிகரித்தல்.

    இதர அறிகுறிகள்

    சிலருக்கு மாதவிலக்கு முடிந்த பிறகும் இந்த அறிகுறிகள் தொடரும். அப்படி தொடர்ந்தால் அவர்களுக்கு ஏற்கனவே மனஅழுத்த நோய் இருக்கும் என்றும் புரிந்து கொள்ளலாம்.

    பெண்களில் 30 சதவீதம் பேருக்கு பி.எம்.எஸ். பிரச்சினை இருந்தால் அவர்களில் 4 சதவீதம் பேருக்கு அதன் தாக்கம் அதிகரித்து பி.எம்.டி.டி.யாக மாறும். ஒரு பெண் அளவிற்கு அதிகமாக கோபம் கொண்டால் அதற்கு அவளது உடல் ரீதியான சில மாற்றங்களும் காரணமாக இருக்கும். அவளது உடலில் ஏற்படும் ஹார்மோன் வித்தியாசங்களால் உடலில் இருக்கும் 'சிரோட்டோத்தின்' அளவு குறையும். இந்த குறைபாட்டிற்கு கோபத்தை தூண்டிக்கொண்டே இருக்கும் ஆற்றல் உண்டு.
    கட்டுப்படுத்தும் சிகிச்சைகள்

    ஏரோபிக் உடற்பயிற்சிகள், யோகா, தியானம் போன்றவை ஓரளவு பலன் தரும். பெரும்பாலானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். பி.எம்.டி.டி. பாதிப்புகள் உருவாக ஹார்மோன் சமச்சீரற்றதன்மை தான் காரணம் என்பதால், அந்த ஹார்மோனை மையப்படுத்தியே சிகிச்சைகளும் கொடுக்கப்படுகின்றன. சிலருக்கு, மாதவிலக்கு தொடங்கிய 14 நாளில் இருந்து மாதவிலக்கு முடிந்த ஒன்றிரண்டு நாட்கள் வரை மருந்து சாப்பிட வேண்டியதிருக்கும். சிலருக்கு எல்லா நாட்களும் மருந்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படலாம்.

    பெண்கள் தங்களுக்கு பி.எம்.டி.டி. பாதிப்பு தான் ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து விட்டால் இதற்கான சிகிச்சைகள் எளிது. அதுபோல் ஆண்களும், சமூகமும் பெண்களுக்கு இப்படி ஒரு பாதிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கு தக்கபடி பெண்களிடம் நடந்து கொள்ள வேண்டும்.
    கோடை என்றாலே `உஷ்.. என்ன வெயில்!' என்று, முகம் சுளிக்கவேண்டாம். கர்ப்பிணிகளின் ஒரு ஐஸ்கிரீம் சுவைப்பது போன்ற உணர்வுடன் `ஜில்லென்று' கோடைகாலத்தை ஜாலியாக கழிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
    பொதுவாகவே கர்ப்பிணிகளின் உடல்வெப்ப நிலை சற்று அதிகமாக இருக்கும். அதோடு கோடை வெயில் உஷ்ணமும் சேர்ந்துகொள்வதால் அவர்கள் அதிக அவஸ்தைகளை அனுபவிப்பார்கள்.

    கர்ப்பிணிகள் முடிந்த அளவு பகல் நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. அடிக்கடி தண்ணீரில் நனைத்த துணியை கழுத்தின் பின்பகுதியிலும், நெற்றியிலும் வைத்தால் இதமாக இருக்கும். ஸ்பிரே பாட்டிலில் தண்ணீரை ஊற்றிவைத்துக்கொண்டு அவ்வப்போது முகத்தில் ஸ்பிரே செய்து துடைப்பது ஆசுவாசம் தரும்.

    மூன்று மாத கர்ப்பத்தை கடந்தவர்களுக்கு கோடை காலத்தில் காலில் வீக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். பகல் நேரத்தில் தூங்கும்போது காலுக்கு கீழ் ஒரு டவலை மடக்கிவைக்கவேண்டும். பகலில் அதிக நேரம் தூங்குவதும் நல்லதல்ல. உட்கார்ந்திருக்கும்போது காலை சற்று மேலே தூக்கிவைத்திருப்பது அவசியம்.

    ஒன்றரை மணி நேரத்திற்கு ஒரு கப் என்ற அளவில் தண்ணீரை பருகிக்கொண்டிருக்கவேண்டும். வைட்டமின் சி சத்து நிறைந்த எலுமிச்சை சாறு, ஆரஞ்சு ஜூஸ் போன்றவைகளை குடித்தால் உஷ்ணம் குறைவதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

    அதிகமாக வியர்க்கும்போது உடலில் நீர்ச்சத்து குறைவது மட்டுமின்றி உடலுக்கு இன்றியமையாத எலக்ட்ரோலைட்டுகளும் இழப்பாகிறது. அதனால் தண்ணீர் குடிப்பதோடு மட்டுமின்றி உப்பு சேர்த்த கஞ்சி தண்ணீர் பருகுவது நல்லது. உடலில் எலக்ட்ரோலைட்டு அளவு குறைந்தால் தசைப்பிடிப்பு ஏற்பட்டு கர்ப்பிணிகள் அவதி்ப்படுவார்கள். தாய்ப்பால் புகட்டும் தாய்மார்களும் கோடைகாலத்தில் போதுமான அளவில் தண்ணீர் பருகவேண்டும்.
    குழந்தைப் பேறு என்பது திரைப்படங்களில் காட்டப்படுவது போல் அவ்வளவு வேகமாகவும் சாதாரணமாகவும் நிகழ்ந்து விடுவதில்லை.
    * சாதாரணமாக கருவுற்ற பெண்ணுக்கு 280 நாட்களின் முடிவில் குழந்தை பெறுவதற்கான வலி ஏற்படலாம். இது இரு வாரங்கள் முன்னால் பின்னால் நிகழ்வதும் சாதாரணமானது. கருவுற்ற பின் கருப்பை விரிவடையும் போது தாயானவள் ஒரு சிறு அசௌகரியத்தை உணரக் கூடும். மேலும் கருப்பை விரிய விரிய அங்கே காணப்படும் நரம்புகள் முறுக்கப்பட்டு அழுத்தப்படுவதால் வயிற்று நோவு சற்று அதிகமாக நிகழக் கூடும்.

    * கர்ப்பகாலம் 35 வாரங்களை அண்மிக்கும் போது (கர்ப்பகாலம், கடைசி முதல் மாதவிடாய்த் தேதியிலிருந்து கணிக்கப்படும்) விட்டு விட்டு ஏற்படும் “பிரக்ஸன் கிரிக்“ எனப்படும் குத்துவலி எழும்பும். இவ்வாறான வலிகள் பல காணப்படும் போது எவ்வாறு உண்மையான பிரசவ வலியை உணர்வது என்று நீங்கள் கேட்கலாம். பிரசவ வலியின் போது கடுமையான கருப்பைச் சுருக்கத்துடன் வேதனை அதிகரித்துச் செல்வதுடன் இரு குத்து வலிகளுக்கிடையிலான நேர இடைவெளி (The Interval between the contraction) குறைந்து செல்லும். உதாரணமாக ஒவ்வொரு அரை மணிக்கு ஒரு தடவை வருகின்ற வலி பின்னர் இருபது நிமிடங்களுக்கு ஒரு தடவையாகவும் பதினைந்து தடவைகளுக்கு ஒரு முறையாகவும் ஏற்பட்டு பிரசவவலியாக மாறும் போது ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்குள்ளும் மூன்று தடவைகள் ‘குத்து’ எழும்பல் நிகழும். சாதாரணமாக பிரசவ வலி எழும்பும் போது பன்னீர் குடம் உடைந்து திரவம் வெளியேறும் போது தாயானவள் உடனடியாக பிரசவ விடுதிக்கு அல்லது பிரசவமனைக்கு அனுப்பப்பட வேண்டும். அங்கே மருத்துவர் பிரசவ நிலையை அளவிட்டு அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்வார்.

    * பிரசவம் ஆரம்ப நிலையிலிருக்கும் போது எனீமா கொடுப்பதன் மூலம் குடலிலிருந்து மலம் அகற்றப்படும் (இல்லாவிட்டால் குழந்தை பிறக்கும் போது தாயின் மலமும் வெளியேறி குழப்பத்தை ஏற்படுத்தி விடும்) இவ்வாறு சுத்தம் செய்த பின் பன்னீர் குடம் உடைக்கப்படும். இதன் போது வெளியேறும் அம்னியன் பாய்பொருளின் நிறம் அவதானிக்கப்படும். பெரும்பாலும் அம்னியன் பாய்பொருள் நிறமற்றதாக அல்லது மெல்லிய வைக்கோல் நிறமுடையதாக இருக்கும் (உண்மையில் அம்னியன் பாய்பொருள் என்பது மென்சவ்வுகளின் சுரப்புக்களையும் குழந்தை கழித்த சிறுநீரையும் கொண்ட திரவமாகும்) பின்னர் பிரசவத்தை விரைவுபடுத்த சின்ரோசினொன் என்ற ஒக்சிரோசின் ஒமோன் ஊசி மூலம் ஏற்றப்படும். தொடர்ந்து குழந்தையின் இதயத் துடிப்பு அவதானிக்கப்படும். குழந்தையின் இதயத் துடிப்பானது “பினாட்” என்கின்ற உடலொலிபெருக்கி மூலமாகவோ அல்லது இயந்திரத்தின் மூலம் வரைபாகவோ (CTG) பெற்றுக் கொள்ள முடியும்

    * ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்திற்கு ஒரு முறை மருத்துவர் கருப்பைக் கழுத்து விரிவை (Cervical dilatation) அளவிட்டுக் கொண்டிருப்பார். கருப்பைச் சுருக்கம் குழந்தையின் இதயத்துடிப்பு / தாயின் நாடித்துடிப்பு குருதியமுக்கம் என்பன தொடர்ந்து அவதானிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். பிரசவவலி உச்சக் கட்டத்தை அடையும் போது வலியைச் சற்றுக் குறைப்பதற்காக பெத்தடீன் போன்ற வலி நிவாரணிகள் தாய்க்கு ஏற்றப்படும். சாதாரணமாக பிரசவ காலமானது 12-18 மணித்தியாலங்கள் வரை நீடிக்கும். இக்காலப் பகுதியில் தாய் உணவு நீராகமின்றி (Fasting) வைக்கப்படுவார். பிரசவத்தில் ஏதும் சிக்கல் நிகழ்ந்து அறுவைச் சிகிச்சை ஏதாவது செய்யவேண்டி ஏற்பட்டால் அதற்கான தயார் நிலையே இந்த Fasting. இதன்போது ஊசி வழியாகத் தாய்க்கு தேவையான நீராகரம் சென்று கொண்டிருக்கும். குழந்தையின் இதயத்துடிப்பு குறையும் பட்சத்தில் (foetal distress) அல்லது குழந்தையின் அம்னியன்பாய் பொருளினுள் மலம் கழிக்கும் பட்சத்தில் அல்லது நீண்ட நேரமாகியும் குழந்தை பெறமுடியாத சந்தர்ப்பத்தில் (Prolong Labour) சிசேரியன் அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.

    * குழந்தை பிறப்பதற்கு அண்மித்த நிலையில் குழந்தையின் தலை வெளியே வர முயற்சிக்கும். இதன் போது வலி உச்ச நிலையை அடையும்.

    * குழந்தையின் தலை இலகுவாக வெளியே வருவதற்காகவும் தாயின் யோனியின் வழியில் கிழிவுகள் ஏற்படாதிருக்கவும் எபிசியோட்டமி (Episiotomy) என்ற சிறு வெட்டு ஒன்று வெட்டப்படும். தொடர்ந்து தலை வேகமாக வந்து மோதுவதைத் தடுக்க கையால் அணை கொடுக்கப்படும். தலை வெளியே வந்ததும் அந்த நேரம் குழந்தை பெறப்படும் நேரமாகக் குறிக்கப்படும். தலையை தொடர்நது தோள்களும் பின்னர் முழுக் குழந்தையும் வெளியே இழுக்கப்படும். குழந்தை பிறந்தவுடன் தொப்பிள் நாண் கட்டப்பட்டு சூல்வித்தகத்திலிருந்து குழந்தை பிரிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படும். குழந்தை பிறந்தவடன் வீரிட்டு அழ வேண்டும். இதுவே குழந்தையின் சுவாச தூண்டல். அவ்வாறு குழந்தை அழாவிட்டால் நாம் அதனை தூண்ட வேண்டி ஏற்படும்.
    ஒரு பெண்ணுக்கு ஈஸ்ட் தொற்று, எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்றாலும், வெப்பமான வானிலை உடலில் ஈஸ்ட் தொற்று வளர உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
    கோடைகாலத்தில் பல்வேறு நோய்களும் தொற்றுகளும் ஏற்படுவது சகஜமானது. ஆனால், குறிப்பாக பெண்களுக்கு அவர்களது அந்தரங்கப் பகுதியில் ஏற்படும் சங்கடத்தை இயல்பாக வெளியே பேச தயங்குவார்கள். இதனால் பிரச்சனை முற்றிய பின்னரே மருத்துவரை அணுகுகின்றனர்.

    கோடைக்காலத்தில் பெண்களின் அந்தரங்கப் பகுதியில் ஈஸ்ட் தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு ஈஸ்ட் தொற்று, எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்றாலும், வெப்பமான வானிலை உடலில் ஈஸ்ட் வளர உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

    ஈஸ்ட் தொற்று என்பது பெண்ணுறுப்பில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக ஏற்படும் பூஞ்சை தொற்று ஆகும். அந்தரங்க உறுப்பில் எரிச்சல், திரவம் வெளியேறுவது,  கடுமையான அரிப்பு, சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் உடலுறவின் போது அதிக வலி இருப்பது என்பது ஈஸ்ட் தொற்றின் சில பொதுவான அறிகுறிகளாகும்.

    கோடைக்காலத்தில் வானிலையில் உள்ள ஈரப்பதம், நெருக்கமான பகுதிகளில் வியர்வை மற்றும் ஈரப்பதத்தை ஏற்படுத்துகிறது. காற்றோட்டம் இல்லாத மற்றும் ஈரமான பகுதிகளில் ஈஸ்ட் வளரும் என்பதால், கோடை காலத்தில் பெண்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் அதிகம்.

    வியர்வை தவிர, பல்வேறு விஷயங்கள் பூஞ்சைத் தொற்றுக்கு காரணமாகின்றன. நீரிழிவு, எச்.ஐ.வி, கர்ப்பம், அதிக எடை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை என பல காரணங்களால் பூஞ்சைத் தொற்று ஏற்படுகிறது.

    பூஞ்சைத் தொற்று ஏற்படுவதைத் தடுக்க கோடையில் நீச்சல் உடைகளை அணிவதை தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. அந்தரங்கப் பகுதியின் pH அளவை சமநிலைப்படுத்தினால் போதுமானது.  

    உங்கள் நெருக்கமான பகுதியில் வியர்வை மற்றும் ஈரப்பதத்தை குறைக்க மிக முக்கியமான விஷயம் காற்றோட்டமான ஆடைகளை அணிவது ஆகும். பருத்தி உள்ளாடைகளை அணிவது பூஞ்சைத் தொற்றை தடுக்கும். அதேபோல், பாலியஸ்டர் உள்ளாடைகளைத் தவிர்ப்பது நல்லது.

    நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்தால் அல்லது இறுக்கமான ஆடைகளை அணிந்தால், படுக்கைக்கு செல்வதற்கு முன் குளிக்கவும், காற்றோட்டமாக இருப்பதற்காக தூங்கும் போது உள்ளாடைகளை அணிவதைத் தவிர்க்கலாம்.

    அந்தரங்கப் பகுக்தியில் வாசனை திரவியங்கள் கொண்ட பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்

    ரசாயனங்கள் மற்றும் நச்சுப் பொருட்கள் கொண்ட பாடி ஸ்ப்ரேக்கள், வாசனை திரவியங்கள், கிரீம்கள் மற்றும் சோப்புகளைத் தவிர்க்க வேண்டும். அதேபோல பிறப்புறுப்பை சுத்தம் செய்வதற்கு ரசாயனப்பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.

    மழை மற்றும் குளிர் காலத்தில் வெதுவெதுப்பான நீர் மற்றும் வாசனை இல்லாத சோப்பு கொண்டு சுத்தம் செய்யவும். அதேபோல, பிறப்புறுப்பின் வெளிப்புற பகுதிகளில் மட்டுமே சோப்பைப் பயன்படுத்த வேண்டும்.

    டவுச்சிங் செய்வதைத் தவிர்க்கவும். திரவ நிலையில் இருக்கும் ரசாயனக் கலவைகளைப் பயன்படுத்தி பிறப்புறுப்பை கழுவுவதைத் தவிர்க்கவும். ஏனென்றால் Douche செய்வது, இடுப்பு அழற்சி நோயை உருவாக்கும் சாத்தியக்கூறு அதிகமாக உள்ளது.

    அதுமட்டுமல்ல, பெண்களுக்கு பிறப்புறுப்பு நோய்த்தொற்றுகள் மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.

    ஈஸ்ட் வளர்ச்சியை, சர்க்கரை  ஊக்குவிக்கும் என்பதால் உங்கள் சர்க்கரையை உணவில் குறைப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடிப்பது உங்கள் உடலுக்கு மிகவும் நல்லது,  

    பெண்கள் தங்கள் பாலியல் ஆரோக்கியம் பற்றிய பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்வதற்கு வெட்கப்படுவார்கள். இதனால் நிலைமை மோசமான பிறகுதான் மருத்துவரை அணுகுவார்கள். தாமதமாக மருத்துவரை அணுகுவதால், நிலைமை மோசமாகும், சிகிச்சை பலன் தர நாள் அதிகரிக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும்.
    ×