search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சருமத்தை ஜொலிக்க வைக்கும் பாதாம் எண்ணெய்
    X

    சருமத்தை ஜொலிக்க வைக்கும் பாதாம் எண்ணெய்

    இயற்கை பொருளான பாதாம் எண்ணெயை கொண்டு உங்கள் சருமத்தை ஜொலிப்புடன் மிருதுவாக்குவது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    பாதாம் எண்ணெயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின் ஏ சத்து இருப்பதால் இது உங்கள் சருமத்திற்கு ஈரப்பதம் கொடுக்கிறது. இது உங்கள் சரும துளைகளில் தேங்கியுள்ள அழுக்குகளை நீக்குவதால் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். சரி வாங்க ஜொலிப்பான சருமம் கிடைக்க பாதாம் எண்ணெய்யை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.

    * 1/2 டீஸ்பூன் தேன் மற்றும் பாதாம் எண்ணெயை நன்றாக கலந்து இந்த கலவையை முகத்தில் தடவி இரவு முழுவதும் விட்டு விட வேண்டும் பிறகு காலையில் எழுந்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும் வாரத்திற்கு 2-3 முறை இதை செய்து வந்தால் மிருதுவான சருமம் கிடைக்கும்.

    * 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1/2 டீஸ்பூன் பாதாம் எண்ணெயை கலந்து கொள்ளவும். இந்த கலவையை சருமத்தில் 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு மைல்டு க்ளீன்சர் மற்றும் வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவ வேண்டும் வாரத்திற்கு 3 முறை இதை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.



    * பாதாம் எண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டர் 1/2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் இரண்டையும் கலந்து கொள்ளவும் இதை முகத்தில் அப்ளே செய்து இரவு முழுவதும் விட்டு விட வேண்டும் பிறகு காலையில் லேசான க்ளீன்சர் மற்றும் மிதமான சூடு அல்லது குளிர் கலந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும் வாரத்திற்கு 3-4 தடவை செய்து வந்தால் ஜொலிப்பான சருமம் கிடைக்கும்.

    * 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் ப்ரவுன் சுகர் இரண்டையும் நன்றாக கலந்து இந்த ஸ்க்ரப்பை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும் இந்த ஸ்க்ரப்பை வாரத்திற்கு ஒரு முறை என பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    * வெள்ளரிக்காயை நன்றாக மசித்து 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கொள்ளவும் இந்த கலவையை முகத்தில் அப்ளே செய்து 10 நிமிடங்கள் விட்டு விடவும் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் வாரத்திற்கு இரண்டு முறை இந்த மாஸ்க்கை பயன்படுத்தி வந்தால் மிருதுவான பொலிவான சருமம் கிடைக்கும்.
    Next Story
    ×