search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தித்திப்பான ஷீர் குர்மா
    X

    தித்திப்பான ஷீர் குர்மா

    வீட்டில் சுவையான இனிப்பு செய்ய விரும்பினால் ஷீர் குர்மா செய்யலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 1 லிட்டர்,
    சேமியா - 1 கப்,
    நெய் - 2 ஸ்பூன்,
    முந்திரி, பாதாம், பிஸ்தா, பேரிச்சை - தேவையான அளவு,
    ஏலக்காய் பொடி - ஒரு சீட்டிகை,
    சர்க்கரை - 1/2 கப்,
    ரோஸ் வாட்டர் - 1 ஸ்பூன்,
    குங்குமப் பூ - 1/4 ஸ்பூன்



    செய்முறை :

    நெய்யை நன்கு காய வைத்து நட்ஸை போட்டு வறுத்து தனியாக வைத்து கொள்ளவும்.

    சேமியாவையும் நன்கு உடைத்து நெய்யில் பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்சவும். பால் நன்குக் காய்ந்ததும் வறுத்த சேமியாவை போட்டு கிளறவும்.

    அடுத்து அதில் சர்க்கரை சேர்க்கவும்.

    சேமியா வெந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.

    பின் அதில் வறுத்து வைத்துள்ள நட்ஸ், ரோஸ் வாட்டர், ஏலக்காய் பொடி மற்றும் குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும்.

    சுவையான ஷீர் குர்மா தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×