search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான சுவையான காராமணி ரைஸ்
    X

    சத்தான சுவையான காராமணி ரைஸ்

    குழந்தைகள் வெரைட்டி ரைஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காராமணி சேர்த்து வெரைட்டி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - ஒன்றரை கப்,
    காராமணி - அரை கப்,
    வெங்காயம் - 1 ,
    தக்காளி - 1,
    சாம்பார் பொடி - அரை டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
    எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காராமணியை ஊறவைத்து குக்கரில் வேக விட்டு, வடிக்கட்டி ஆறவிடவும்.

    சாதத்தை உதிரியாக வேக வைத்து ஆற வைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்த பின்னர் அதில், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வேகவைத்த காராமணி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும்.

    அடுத்து வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு மசாலா நன்கு பரவும்படி கிளறிக் கொள்ளவும். பிறகு மூடி 2 நிமிடம் மிதமான தீயில் சமைக்கவும்.

    கடைசியாக கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×