search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான தக்காளி பிரியாணி
    X

    சூப்பரான தக்காளி பிரியாணி

    பல்வேறு வகையான பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று தக்காளி சேர்த்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 2 கப்,
    தக்காளி - 4
    பச்சை மிளகாய் -2,  
    மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),
    பெரிய வெங்காயம் - ஒன்று,
    பிரெட் ஸ்லைஸ் - 2,
    முந்திரித் துண்டுகள் - 6,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி,
    நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :

    2 தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி அரை மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

    வாணலியில் நெய் விட்டு முந்திரியை சேர்த்து வறுக்கவும்.

    பிரெட்டை துண்டுகளாக வெட்டு வறுத்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெந்நீரில் 2 தக்காளிப்பழத்தைப் போட்டு 5 நிமிடம் வைத்திருந்து, தோலை உரித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளிக்காயையும் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் இதனுடன் மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கி, 3 கப் நீர் விட்டு, அரிசியைக் களைந்து சேர்த்து தக்காளி விழுது, உப்பு சேர்த்து குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

    குக்கரில் ஆவி வெளியேறியதும், சாதத்துடன் வறுத்த முந்திரி, பிரெட் துண்டுகள் சேர்க்கவும்.

    கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.

    இதற்குத் தொட்டுக்கொள்ள வெங்காய தயிர்ப்பச்சடி ஏற்றது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×