search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான சர்க்கரை வள்ளிக் கிழங்கு கீர்
    X

    சூப்பரான சர்க்கரை வள்ளிக் கிழங்கு கீர்

    குழந்தைகளுக்கு கீர் என்றால் விரும்பி குடிப்பார்கள். இன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கு சேர்த்து சூப்பரான கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஜவ்வரிசி - 5 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - சுவைக்கு
    சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 1
    முந்திரி பருப்பு (தோல் நீக்கியது) - தேவையான அளவு
    பாதாம் பருப்பு (தோல் நீக்கியது) - தேவையான அளவு
    பால் - 3 கப்
    ஏலக்காய் - 1 டேபிள் ஸ்பூன்



    செய்முறை :

    ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

    முந்திரி, பாதாம் பருப்பை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பால் சேர்த்து நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் ஜவ்வரிசி சேர்க்கவும்

    நன்றாக கலக்கி அடுப்பை குறைந்த தீயில் வைத்து ஜவ்வரிசியை வேக விடவும்.

    ஜவ்வரிசி வெந்தவுடன் சர்க்கரை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடங்கள் வைக்கவும்.

    வேக வைத்து நறுக்கி வைத்துள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறவும்

    பிறகு குங்குமப் பூ, ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறவும்

    அடுப்பை அணைத்து விட்டு ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள்

    அப்படியே பாதாம் பருப்பை அதன் மேல் தூவி அலங்கரித்து சூடாக அல்லது ஆறின பிறகு பரிமாறுங்கள்.

    சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் ரெசிபி ரெடி

    குறிப்பு :

    ஜவ்வரிசியை முன்பே ஊற வைத்து கொண்டால் பாயசத்துக்கு மென்மையான பதம் கிடைக்கும். வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை துருவிக் கொண்டால் பாயசம் ரொம்பவும் கட்டிகள் இல்லாமல் இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×