
பச்சரிசி - கால்கிலோ
உளுந்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 150 கிராம் (தூளாக்கவும்)
வெள்ளை எள் - 100 கிராம்

செய்முறை :
பச்சரிசியை இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து, மாவு தயாரித்துக்கொள்ளவும்.
உளுந்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து பொடித்துக்கொள்ளவும்.
அவற்றுடன் எள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அது சூடானதும் வெல்லத்தை கொட்டி பாகு காய்ச்சிக்கொள்ளவும்.
பின்னர் பாகுவை அரிசி மாவு கலவையில் ஊற்றி கிளறவும்.
இந்த மாவை தட்டைகளாக தட்டி உலற வைக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தட்டைகளை போட்டு பொரித்தெடுக்கலாம்.
சூப்பரான எள்ளுத்தட்டை ரெடி.