என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
இட்லிக்கு அருமையான கும்பகோணம் கடப்பா
Byமாலை மலர்10 Aug 2018 6:21 AM GMT (Updated: 10 Aug 2018 6:21 AM GMT)
கும்பகோணத்தில் மிகவும் பிரபலமான கடப்பாவை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு - ஒரு கப்,
உருளைக்கிழங்கு - 2,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
வெங்காயம் - 1,
தக்காளி - ஒன்று,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
அரைக்க:
தேங்காய்த் துருவல் - கால் கப்,
பொட்டுக்கடலை - 5 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய் - ஒன்று,
பூண்டு - 4 பல்.
தாளிக்க:
பட்டை - சிறிய துண்டு,
கிராம்பு - ஒன்று,
செய்முறை :
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாசிப்பருப்பை நன்றாக கழுவி அதனுடன் மஞ்சள் தூள், உருளைக்கிழங்கு சேர்த்து வேக விட்டு எடுக்கவும். பருப்பு வெந்தவுடன் உருளைக்கிழங்கை தோல் நீக்கி பருப்புடன் சேர்த்து மசித்து கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி சற்று வதங்கியதும் அரைத்த தேங்காய் விழுது, வேக வைத்த பருப்பு கலவை, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
பாசிப்பருப்பு - ஒரு கப்,
உருளைக்கிழங்கு - 2,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
வெங்காயம் - 1,
தக்காளி - ஒன்று,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
அரைக்க:
தேங்காய்த் துருவல் - கால் கப்,
பொட்டுக்கடலை - 5 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய் - ஒன்று,
பூண்டு - 4 பல்.
தாளிக்க:
பட்டை - சிறிய துண்டு,
கிராம்பு - ஒன்று,
கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை :
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாசிப்பருப்பை நன்றாக கழுவி அதனுடன் மஞ்சள் தூள், உருளைக்கிழங்கு சேர்த்து வேக விட்டு எடுக்கவும். பருப்பு வெந்தவுடன் உருளைக்கிழங்கை தோல் நீக்கி பருப்புடன் சேர்த்து மசித்து கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி சற்று வதங்கியதும் அரைத்த தேங்காய் விழுது, வேக வைத்த பருப்பு கலவை, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
கடைசியாக மேலே கொத்தமல்லித்தழை தூவி இட்லியுடன் பரிமாறலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X