search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இட்லிக்கு அருமையான செட்டிநாடு மிளகாய் சட்னி
    X

    இட்லிக்கு அருமையான செட்டிநாடு மிளகாய் சட்னி

    இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள இந்த செட்டிநாடு மிளகாய் சட்னி சூப்பரான இருக்கும். இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 2
    வரமிளகாய் - 5
    பூண்டு - 3
    புளி - 1 இன்ச்
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு :

    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.

    பின்பு அதில் பூண்டு, புளி, வரமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, உப்பு தூவி மீண்டும் 2 நிமிடம் கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றினால், செட்டிநாடு மிளகாய் சட்னி ரெடி!!

    புளிக்கு பதிலாக தக்காளியையும் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×