search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தித்திப்பான மூங்கில் அரிசிப் பாயாசம்
    X

    தித்திப்பான மூங்கில் அரிசிப் பாயாசம்

    கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் வாழும் நாடோடிகள் மற்றும் பழங்குடியினரின் முக்கிய உணவாகும். இன்று மூங்கில் அரிசிப் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மூங்கில் அரிசி - 100 கிராம்
    வெல்லம் - 100 கிராம்
    தேங்காய்ப்பால் - 1 லிட்டர் (நன்கு முற்றிய தேங்காய்களாக இருக்க வேண்டும்)
    ஏலக்காய் - 2
    நெய் - 1 டீஸ்பூன்
    முந்திரி, திராட்சை - தேவையான அளவு.



    செய்முறை :

    மூங்கில் அரிசியை நன்கு கழுவி, ஊறவைக்க வேண்டும்.

    நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும்.

    தேங்காயில் 3 முறை பால் எடுத்து கடைசியாக எடுத்த தேங்காய்ப்பாலுடன் அரிசியை சேர்த்து வேகவைக்கவும்.

    அரிசி பாதி வெந்ததும் மீதமுள்ள தேங்காய்ப்பாலையும் சேர்த்து, மூங்கில் அரிசி முழுமையாக வேகும் வரை கொதிக்க விடவும்.

    இத்துடன் வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து ருசிபார்த்து வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×