search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அருமையான தக்காளி - புதினா சாதம்
    X

    அருமையான தக்காளி - புதினா சாதம்

    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு செய்து கொடுக்க தக்காளி - புதினா சாதம் அருமையாக இருக்கும். இன்று இந்த சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - ஒரு கப்,
    உப்பு - தேவையான அளவு.

    அரைக்க:

    புதினா - ஒரு கைப்பிடி,
    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி,
    பச்சை மிளகாய் - 4,
    இஞ்சி - ஒரு துண்டு,
    பூண்டு - 4 பல்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,

    தனியே அரைக்க:

    தக்காளி - 3.

    தாளிக்க:

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பட்டை - ஒரு துண்டு.



    செய்முறை:

    அரிசியை உப்பு சேர்த்து உதிராக வேக வைத்த கொள்ளவும்.

    புதினா, கொத்தமல்லித்தழையை சுத்தம் செய்து, அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

    தக்காளியைத் தனியே அரைத்து வடிகட்டுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை போட்டு தாளித்த பின்னர், புதினா-கொத்தமல்லி விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகக் கிளறுங்கள்.

    பிறகு, தக்காளி சாறு, சிறிது உப்பு சேர்த்து, தக்காளி சாறு சற்று பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறவும்.

    ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது அதில் சாதத்தைப் போட்டு நன்கு கிளறிப் பரிமாறுங்கள்.

    சூப்பரான தக்காளி, புதினா சாதம் ரெடி.

    குறிப்பு: சற்றுப் புளிப்புச் சுவை விரும்புபவர்கள், ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக்கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×