என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான கொண்டைக்கடலை புதினா சாதம்
Byமாலை மலர்17 April 2018 6:25 AM GMT (Updated: 17 April 2018 6:25 AM GMT)
வெறும் புதினா சாதம் செய்யாமல் அதனுடன் கொண்டைக்கடலை சேர்த்து சாதம் செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த சாதம் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி - 1 கப்,
கொண்டைக்கடலை - ½ கப்,
தக்காளி - 1
வெங்காயம் - 1,
பிரிஞ்சி இலை - 1,
ப.மிளகாய் - 5
இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள்- அரை டீஸ்பூன்,
தனியா தூள் - கால் டீஸ்பூன்,
புதினா இலைகள் - 1 கைப்பிடி,
எலுமிச்சைச் சாறு - ½ டீஸ்பூன்,
எண்ணெய், நெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கொண்டைக்கடலை, அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.
தக்காளி, வெங்காயம், புதினாவை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
கொண்டைக்கடலையை வேக வைத்து கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பிரிஞ்சி இலை இவற்றை வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அரிசி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும்.
அரிசி அரை வேக்காடு வெந்தவுடன் அதில் வேக வைத்த கொண்டைக்கடலை, புதினா இலை, எலுமிச்சைச் சாறு, சேர்த்துக் கலக்கி சிறு தீயில் நன்றாக வேக விடவும்.
கடைசியாக சிறிது நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
சூப்பரான கொண்டைக்கடலை புதினா சாதம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அரிசி - 1 கப்,
கொண்டைக்கடலை - ½ கப்,
தக்காளி - 1
வெங்காயம் - 1,
பிரிஞ்சி இலை - 1,
ப.மிளகாய் - 5
இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள்- அரை டீஸ்பூன்,
தனியா தூள் - கால் டீஸ்பூன்,
புதினா இலைகள் - 1 கைப்பிடி,
எலுமிச்சைச் சாறு - ½ டீஸ்பூன்,
எண்ணெய், நெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கொண்டைக்கடலை, அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.
தக்காளி, வெங்காயம், புதினாவை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
கொண்டைக்கடலையை வேக வைத்து கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பிரிஞ்சி இலை இவற்றை வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அரிசி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும்.
அரிசி அரை வேக்காடு வெந்தவுடன் அதில் வேக வைத்த கொண்டைக்கடலை, புதினா இலை, எலுமிச்சைச் சாறு, சேர்த்துக் கலக்கி சிறு தீயில் நன்றாக வேக விடவும்.
கடைசியாக சிறிது நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
சூப்பரான கொண்டைக்கடலை புதினா சாதம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X