என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான வெண்டைக்காய் கார குழம்பு
Byமாலை மலர்12 April 2018 6:37 AM GMT (Updated: 12 April 2018 6:37 AM GMT)
சூடான சாதத்தில் வெண்டைக்காய் கார குழம்பு சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - 150 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
புளி தண்ணீர் - கால் கப்
தாளிக்க
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு
கறிவேப்பிலை, கொத்தமல்லி
செய்முறை :
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
வெண்டைக்காயை சமமான துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
வெண்டைக்காயை வெறும் கடாயில் போட்டு 5 நிமிடம் வதக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயத்தின் நிறம் மாறியவுடன் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். (விரும்பினால் தக்காளியை அரைத்தும் சேர்க்கலாம்)
அடுத்து அதில் வதக்கிய வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும்.
தக்காளி வெந்து எண்ணெய் பிரியும் போது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
தூளின் வாசம் குறைந்து வெண்டைக்காய் வெந்ததும், புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையான வெண்டைக்காய் கார குழம்பு தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெண்டைக்காய் - 150 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
புளி தண்ணீர் - கால் கப்
தாளிக்க
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு
கறிவேப்பிலை, கொத்தமல்லி
செய்முறை :
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
வெண்டைக்காயை சமமான துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
வெண்டைக்காயை வெறும் கடாயில் போட்டு 5 நிமிடம் வதக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயத்தின் நிறம் மாறியவுடன் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். (விரும்பினால் தக்காளியை அரைத்தும் சேர்க்கலாம்)
அடுத்து அதில் வதக்கிய வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும்.
தக்காளி வெந்து எண்ணெய் பிரியும் போது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
தூளின் வாசம் குறைந்து வெண்டைக்காய் வெந்ததும், புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையான வெண்டைக்காய் கார குழம்பு தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X