search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அருமையாக பெங்காலி ஆலு மசாலா
    X

    அருமையாக பெங்காலி ஆலு மசாலா

    பெங்காலி ஆலு மசாலாவை தோசை, பூரி, நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று பெங்காலி ஆலு மசாலா செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - கால் கிலோ,
    மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,  
    ஏலக்காய், பட்டை - தலா ஒன்று,
    தனியா - 2 டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 6,
    வெங்காயம், தக்காளி - தலா 2,
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    தயிர் - 3 டீஸ்பூன்,
    [பாட்டி மசாலா] மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, பெரிய துண்டுகளாக வெட்டி எண்ணெயில் போட்டு பொரித்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சீரகம், மிளகு, ஏலக்காய், பட்டை, தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வெறும் வாணலியில் போட்டு வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு இஞ்சி - பூண்டு விழுது, போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், பொடித்த பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்…

    கடைசியாக பொரித்த உருளைக்கிழங்கை போட்டு தயிர் சேர்த்து சுருள கிளறி இறக்கி, பரிமாறவும்.

    சூப்பரான பெங்காலி ஆலு மசாலா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×