என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
அருமையான விரால் மீன் குழம்பு
Byமாலை மலர்18 Feb 2018 9:38 AM GMT (Updated: 18 Feb 2018 9:38 AM GMT)
தோசை, இட்லி, சாதம், பழைய சாதத்திற்கு தொட்டுகொள்ள இந்த விரால் மீன் குழம்பு சூப்பராக இருக்கும். இன்று இந்த மீன் குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
விரால் மீன் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
[பாட்டி மசாலா] மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
[பாட்டி மசாலா] மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
பூண்டுப் பல் - 10
தக்காளி - 2
வெந்தயம் - அரை டீஸ்பூன் (வறுத்துப் பொடித்தது)
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய்ப் பால் - கால் கப்
தாளிக்க :
நல்லெண்ணெய் - தேவையான அளவு
வெந்தயம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
செய்முறை :
மீனை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள்.
புளியைக் கரைத்துக்கொள்ளுங்கள்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்த பின்னர் அதில் வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாறும்வரை நன்றாக வதக்குங்கள்.
அடுத்து அதில் நசுக்கிய பூண்டை அதில் சேர்த்து, சிறிது நேரம் வதக்குங்கள்.
பிறகு தக்காளியைச் சேர்த்துத் தக்காளி கரையும்வரை வதக்குங்கள்.
அதனுடன் [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள், [பாட்டி மசாலா] மல்லித் தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி புளிக் கரைசல், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை குழம்பைக் கொதிக்கவிடுங்கள்.
குழம்பு நன்றாக கொதித்து பச்சை வாசனை போனவுடன் மீன் துண்டுகளைச் சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடுங்கள்.
பிறகு தேங்காய்ப் பாலைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் வெந்தயப் பொடி, கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான விரால் மீன் குழம்பு ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
விரால் மீன் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
[பாட்டி மசாலா] மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
[பாட்டி மசாலா] மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
பூண்டுப் பல் - 10
தக்காளி - 2
வெந்தயம் - அரை டீஸ்பூன் (வறுத்துப் பொடித்தது)
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய்ப் பால் - கால் கப்
தாளிக்க :
நல்லெண்ணெய் - தேவையான அளவு
வெந்தயம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
செய்முறை :
மீனை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள்.
புளியைக் கரைத்துக்கொள்ளுங்கள்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்த பின்னர் அதில் வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாறும்வரை நன்றாக வதக்குங்கள்.
அடுத்து அதில் நசுக்கிய பூண்டை அதில் சேர்த்து, சிறிது நேரம் வதக்குங்கள்.
பிறகு தக்காளியைச் சேர்த்துத் தக்காளி கரையும்வரை வதக்குங்கள்.
அதனுடன் [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள், [பாட்டி மசாலா] மல்லித் தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி புளிக் கரைசல், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை குழம்பைக் கொதிக்கவிடுங்கள்.
குழம்பு நன்றாக கொதித்து பச்சை வாசனை போனவுடன் மீன் துண்டுகளைச் சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடுங்கள்.
பிறகு தேங்காய்ப் பாலைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் வெந்தயப் பொடி, கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான விரால் மீன் குழம்பு ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X