search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சப்பாத்திக்கு அருமையான பன்னீர் குருமா
    X

    சப்பாத்திக்கு அருமையான பன்னீர் குருமா

    புலாவ், தோசை, நாண், சப்பாத்திக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் பன்னீர் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    பன்னீர் - 200 கிராம்
    தக்காளி - 1
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    [பாட்டி மசாலா] மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    [பாட்டி மசாலா] மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி
    [பாட்டி மசாலா] சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    [பாட்டி மசாலா] கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லித் தழை - சிறிது

    அரைக்க :

    தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
    முந்திரிப்பருப்பு - 10

    தாளிக்க :

    வெண்ணெய் - தேவையான அளவு
    பட்டை - சிறிய துண்டு
    கிராம்பு - 2
    பெரிய வெங்காயம் - 1



    செய்முறை :

    பன்னீரை துண்டுகளாக வெட்டி 10 நிமிடம் வெந்நீரில் போட்டு வைக்கவும். 10 நிமிடங்களில் பள்னீர் மிருதுவாகி விடும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
     
    தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு இரண்டையும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து வெண்ணெய் போட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு வதங்கியதும் [பாட்டி மசாலா] மிளகாய் தூள், [பாட்டி மசாலா] மல்லித் தூள், [பாட்டி மசாலா] சீரகத் தூள். [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] கரம் மசாலா தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.

    மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.

    பிறகு பன்னீர் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வரை கொதிக்க விட்டு கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

    சுவையான பன்னீர் குருமா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×