என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மாலை நேர டிபன் வாழைப்பூ அடை
Byமாலை மலர்9 Feb 2018 9:54 AM GMT (Updated: 9 Feb 2018 9:54 AM GMT)
மாலை நேரத்தில் டீ, காபியுடன் அடை செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். அன்று வாழைப்பூ சேர்த்து அடைசெய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெங்காயம் - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் - 3 பத்தை
எண்ணெய் - தேவையானஅளவு
அரைக்க :
வாழைப்பூ - ஒன்று (சிறியது)
புழுங்கல் அரிசி - அரை கிலோ
கடலைப்பருப்பு - 100 கிராம்
துவரம்பருப்பு - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 5
சோம்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
[பாட்டி மசாலா] மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காயை துருவிக்கொள்ளவும்.
புழுங்கல் அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு மூன்றையும் மூன்று மணி நேரம் ஒன்றாக ஊறவைக்கவும்.
வாழைப்பூவை நரம்பு நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கி வாழைப்பூவை போட்டு 5 நிமிடங்கள் நன்றாக வதக்கி தனியாக வைக்கவும்.
ஊற வைத்த அரிசி, பருப்புக் கலவையை கிரைண்டரில் போட்டு அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, வதக்கிய வாழைப்பூ, [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், துருவிய தேங்காய் சேர்த்துக் கலக்கவும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும், மாவெடுத்து ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.
சூப்பரான வாழைப்பூ அடை ரெடி.
குறிப்பு:
மாவை அரைத்தவுடன் ஊற்றலாம். புளிக்க வைக்க வேண்டியதில்லை.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெங்காயம் - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் - 3 பத்தை
எண்ணெய் - தேவையானஅளவு
அரைக்க :
வாழைப்பூ - ஒன்று (சிறியது)
புழுங்கல் அரிசி - அரை கிலோ
கடலைப்பருப்பு - 100 கிராம்
துவரம்பருப்பு - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 5
சோம்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
[பாட்டி மசாலா] மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காயை துருவிக்கொள்ளவும்.
புழுங்கல் அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு மூன்றையும் மூன்று மணி நேரம் ஒன்றாக ஊறவைக்கவும்.
வாழைப்பூவை நரம்பு நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கி வாழைப்பூவை போட்டு 5 நிமிடங்கள் நன்றாக வதக்கி தனியாக வைக்கவும்.
ஊற வைத்த அரிசி, பருப்புக் கலவையை கிரைண்டரில் போட்டு அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, வதக்கிய வாழைப்பூ, [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், துருவிய தேங்காய் சேர்த்துக் கலக்கவும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும், மாவெடுத்து ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.
சூப்பரான வாழைப்பூ அடை ரெடி.
குறிப்பு:
மாவை அரைத்தவுடன் ஊற்றலாம். புளிக்க வைக்க வேண்டியதில்லை.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X