என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு சீஸ் போண்டா
Byமாலை மலர்6 Feb 2018 8:46 AM GMT (Updated: 6 Feb 2018 8:46 AM GMT)
குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு, சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ,
பச்சைப்பட்டாணி - 3 டேபிள்ஸ்பூன்,
சீஸ் துருவல் - 1/2 கப்,
எலுமிச்சைப்பழச்சாறு - 1/2 பழம்,
வெங்காயம் - 3,
நறுக்கிய பச்சைமிளகாய் - 4,
கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
மேல் மாவிற்கு...
கடலை மாவு - 1 கப்,
உப்பு - சிறிது,
சமையல் சோடா - 1 சிட்டிகை,
ஆரஞ்சு ஃபுட் கலர் - சிறிது,
அரிசி மாவு - 1/4 கப்.
செய்முறை :
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடலை மாவுடன் சமையல் சோடா சேர்த்து சலித்து உப்பு, ஆரஞ்சு ஃபுட் கலர் கலந்து, தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மசித்து உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் வெங்காயம், பச்சைப் பட்டாணி, பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல், உப்பு சேர்த்து கலந்து சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கரைத்து வைத்துள்ள மாவில் உருண்டைகளை முக்கி சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.
சூப்பரான உருளைக்கிழங்கு சீஸ் போண்டா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ,
பச்சைப்பட்டாணி - 3 டேபிள்ஸ்பூன்,
சீஸ் துருவல் - 1/2 கப்,
எலுமிச்சைப்பழச்சாறு - 1/2 பழம்,
வெங்காயம் - 3,
நறுக்கிய பச்சைமிளகாய் - 4,
கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
மேல் மாவிற்கு...
கடலை மாவு - 1 கப்,
உப்பு - சிறிது,
சமையல் சோடா - 1 சிட்டிகை,
ஆரஞ்சு ஃபுட் கலர் - சிறிது,
அரிசி மாவு - 1/4 கப்.
செய்முறை :
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடலை மாவுடன் சமையல் சோடா சேர்த்து சலித்து உப்பு, ஆரஞ்சு ஃபுட் கலர் கலந்து, தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மசித்து உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் வெங்காயம், பச்சைப் பட்டாணி, பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல், உப்பு சேர்த்து கலந்து சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கரைத்து வைத்துள்ள மாவில் உருண்டைகளை முக்கி சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.
சூப்பரான உருளைக்கிழங்கு சீஸ் போண்டா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X