என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: வான்கோழி பிரியாணி
Byமாலை மலர்23 Dec 2017 9:08 AM GMT (Updated: 23 Dec 2017 9:08 AM GMT)
இந்த வருடம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வான்கோழி பிரியாணியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஊற வைப்பதற்கு…
வான்கோழி - 5 பெரிய துண்டுகள்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
நாட்டுத் தக்காளி - 1
புதினா - சிறிது
கொத்தமல்லி - சிறிது
எலுமிச்சை - 1
கல் உப்பு - சிறிது
[பாட்டி மசாலா] மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
தயிர் - 1/4 கப்
பிரியாணிக்கு…
பாசுமதி அரிசி - 2 கப்
பச்சை மிளகாய் - 6 (நீளமாக கீறியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
புதினா - 1 கைப்பிடி அளவு
கொத்தமல்லி - 1 கைப்பிடி அளவு
நெய் - 1 கப்
தாளிப்பதற்கு…
கிராம்பு - 3
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 6
பிரியாணி இலை - 3
அன்னாசிப்பூ - 2
உலர்ந்த ரோஜாப்பூ இதழ் - சிறிது
குங்குமப்பூ - சிறிது
செய்முறை :
ப.மிளகாய், கொத்தமல்லி, புதினாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து வைக்கவும்.
தக்காளியை அரைத்து கொள்ளவும்.
வான்கோழியை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ளவும்.
கழுவிய வான்கோழியை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு அதில் புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு கிளறி, பின் ஊற வைத்துள்ள வான் கோழியை சேர்த்து கிளறி, 1/4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
பின் விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் அரிசியைப் போட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, மிதமான தீயில் குக்கரை மூடி விசில் போடாமல் 10 நிமிடம் வைத்து இறக்கினால், வான்கோழி பிரியாணி ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X