search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    புத்துணர்ச்சி தரும் கோஸ் - கொத்தமல்லி சூப்
    X

    புத்துணர்ச்சி தரும் கோஸ் - கொத்தமல்லி சூப்

    கோஸ், கொத்தமல்லியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை கப்
    தண்ணீர் - தேவைக்கு
    துருவிய எலுமிச்சை தோல் - 1 டேபிள்ஸ்பூன்
    நறுக்கிய முட்டைக்கோஸ் - கால் கப்
    நறுக்கிய பேபி கார்ன் - 1
    பட்டாணி - சிறிதளவு
    கேரட், மிளகாய் - 1
    உப்பு - தேவைக்கு
    மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி



    செய்முறை :

    ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி துருவிய எலுமிச்சை தோல், மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை போட்டு கொதிக்க விடவும்.

    நன்கு கொதித்ததும் தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரை வாணலியில் ஊற்றி அதனுடன் கேரட், முட்டைக்கோஸ், பட்டாணி, பேபி கார்ன் ஆகியவற்றை கொட்டி வேக வைக்கவும்.

    ஓரளவு வந்ததும் அதனுடன் உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும்.

    சூப்பரான சத்தான கொத்தமல்லித் தழை சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×