
கோதுமை மாவு - 250 கிராம்,
உப்பு - தேவைக்கு,
ஓட்ஸ் - 100 கிராம்,
கொத்தமல்லித்தழை - சிறிது,
துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1,
துருவிய பீட்ரூட் - 1 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் - 3,
எண்ணெய் - 30 மி.லி.,

செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஓட்ஸை சூடான கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், கோதுமை மாவு, சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு போட்டு கலந்து, கேரட், பீட்ரூட், தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சிறு உருண்டைகளாக பிடித்து லேசாகத் தேய்த்து கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்து மொறுமொறுவென்று வந்ததும் எடுத்து பரிமாறவும்.